About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 10 டிசம்பர், 2016

மாயன் வம்சம் அளித்த அறிவுக் கொடை

மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை , வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். நம் குமரிகண்டதிற்கு முன்பே பிரம்மரிஷி விஸ்வகர்மா மாயன் இவற்றை நிறுவினார்.
மாயன் நாகரிகம் சுமார் கி.மு.2500 முன்பாக தொடங்கி கி.பி. 150 வாக்கில் உச்சத்தை அடைந்தது என்று ஆய்வாளர்கள் யூகித்து சொல்கிறார்கள். அதன்பின் அப்போது நிலவிய பன்னாட்டு குடிகளின் வருகை, எதிர்ப்பு, முறையற்ற கையாளுமை, சண்டைகள், போன்ற காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது. இன்றும் உலகின் பல பாகங்களில் இந்த வம்சத்தினர் இருக்ககூடும். பழங்குடி மக்களாகவும் இருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளது.
எண்ணற்ற பல சித்தர்கள் மாயன் வம்சத்தினரே என்பது அவர்களுடை அறிவியல் பங்களிப்பு நுட்பத்தினை வைத்தே சொல்லி விடலாம். அவர்களுடை கணிதம் அசாத்தியம், பூஜ்யத்தை பயன்படுத்தி மிக நீளமான digits இலக்கங்கள் எழுதினர். தொல்காப்பியத்திலுள்ள கணக்கதிகாரம் பாடல்களை எடுத்து படித்தால் இது உங்களுக்கு விளங்கும்.
உலகில் எங்கெல்லாம் பிரமிட் போன்ற கோபுர விமானம் உள்ளதோ, அதெல்லாம் மாயன் சிற்ப சாஸ்திர மூலம். எகிப்து பிரமிட், தஞ்சை பெரியகோவில், கைலாசநாதர் கோயில் போன்ற நமக்குத் தெரிந்த தளங்களில் ஒரே மாதிரியான விமான அமைப்பைக் காணலாம். மாயன், வானசாசத்திர கணிதத்தில் உச்சம். மெக்சிகோ பிரேசில் போன்ற தென்னமெரிக்க நாடுகளில் பஞ்சாங்கம் நாள்காட்டி விசேஷங்களை 'போகர்' முறைபடுத்தினார் என்று மைக்காஸ் என்ற ஆய்வாளர் பதிவு செய்துள்ளார். யுகம் தோறும் இருந்துள்ளவர்கள்.
காலண்டர்கள், வானசாஸ்த்திர கணக்குகள், அறிவியல், பிரம்மாண்டமான கோவில்கள், நகைகள், சிற்பம், தச்சு, உலோக உருக்கு ஆக்கம் என்று எண்ணற்ற படைப்புகள் சிறந்து விளங்கியது. நாம் இப்போது கையாள்வதை விட இன்னும் நிறையவே அப்போது இருந்திருக்கு. திருப்பதி, ஆதிஸ்ரீரங்கம் போன்று இன்றுள்ள கோயில்கள் எல்லாமே பிரம்மரிஷி மயனால் வடிவாக்கம் பெற்றதே. ஆக, இவர்களின் ஐந்திறன் தொழில் உலகெங்கும் உள்ளது.
அப்போதே, தமிழ் சமஸ்க்ருதம் எல்லாமே கையாளப்பட்டு நடைமுறையில் இருந்தது என்று அறிகிறோம். சோழன் வெளியிட்ட நாணயத்தில் "ஸ்ரீ ராஜராஜ" in red என்று தேவநாகரியில் இருப்பதை பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக