About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 1 டிசம்பர், 2016

தங்க பாரதம்!


பண மதிப்பு ரத்தை அடுத்து தங்கத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் 62.5 பவுன் நகை வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண்கள் 31.25 பவுன் நகை வைத்திருக்கலாம். ஆண்கள் 12.5 பவுன் நகை வைத்திருக்கலாம். இந்த நகைகள், கணக்கு காட்டிய பணத்திலிருந்து வாங்கப்பட்டிருந்தால், விவசாய வருமானத்தில் இருந்து வாங்கப்பட்டிருந்தால் வரி விதிக்கப்படாது. பாரம்பரிய நகைகளுக்கும் வரி விதிக்கப்படாது:- மத்திய அரசு அறிவிப்பு.
இதெல்லாம் பழைய சட்டம்தான், திருத்தமில்லை என்கிறது மத்திய அரசு. இதை அமலாக்கம் செய்யவும், பணம் முடங்குவதை தடுக்க வருமானவரித்துறை புதுசா என்ன கபளீகரம் செய்யப்போகுதோ? வெள்ளி பஸ்பம், தங்கபஸ்பம் வித்தவங்களை /தின்னவங்களை பற்றி ஏதும் சொல்லலை.
அடுத்து உடனே வரவுள்ள அதிரடிகள் என்ன? நிலம் உச்சவரம்பு, பினாமி சொத்துகள், வீட்டு வாடகை உச்சவரம்பு சட்டம், போன்றவைகளில் கடுமையான அமலாக்க திருத்தங்கள் வரவுள்ளனவாம். வந்தாதான் சரி! வீட்டு ஓனர் தன் குடும்பம் நடத்த ஆகும் ஒரு மாத செலவை வாடகையா இல்ல இப்போல்லாம் வசூல் பண்றாங்க. 
பொற்கொல்லர்களிடம் தங்கம் கையிருப்பு, யார் யாருக்கு எத்தனை பவுன் செய்துகொடுத்தனர், PAN அத்தாட்சி நகல் பெற்றுக்கொண்டு நகை செய்து கொடுத்தார்களா என்று விபரம் கேட்டு இம்சிக்காதவரை சரி. வருமானத்திற்கு சம்பந்தமில்லாமல் இனி தங்கத்தை அதிகமாய் முடக்கிக்கொள்ள முடியாது. அப்படி தேவைபட்டால் அதிகப்படியான தங்கத்திற்கு வரி கட்டிகொள்ள வேண்டியதுதான். ஆனால் கல்யாண சீர், பூர்விக குடும்ப நகைகள், சேமிப்பில் வாங்கிய நகைகள் எல்லாம் இந்த இக்கணக்கில் வராது. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் தங்கம் விலை வீழ்ந்து கட்டுக்குள் வர, கோடிக்கணக்கான கீழ் நடுத்தர மக்கள் தங்கம் வாங்க ஏதுவாக இருக்கும். இது 3 மாதம் கழித்துதான் பலன் தரும். இரண்டு வருடங்களுக்கு முன்பே gold bond scheme வந்தது இதன் முன்னோடி. ஒரு குடும்பத்தில் எவ்வளவு தங்கம் இருக்கலாம் என கிட்டத்தட்ட ரேஷன் முறை வருகிறது. அனைவரும் இதனால் பயன்பெறுவர். இனிதான் பொற்கொல்லர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு... படு பிஸிதான்.

இன்றைக்கு ஜனத்தொகை 125 கோடி என்பதில் குறைந்தது 90% நடுத்தரம், 5% கீழ்தட்டு, 5% மேல்தட்டு. ஆக மொத்தத்தில் ஒரு 25% சிறார்+பணக்கார்கள் என்று நீக்கிவிட்டு பார்த்தாலும், என்ஜியது 75%. ஆக, விலை வீழ்ச்சி ஆனால், சுமார் 90 கோடி பேர் ஓராண்டில் தலைக்கு குறைந்த பட்சம் 5 கிராம் வாங்கினாலே, நினைத்து பார்க்க முடியாத அளவில் பொற்கொல்லர் தொழில் வாய்ப்பு கணிசமாகும். அந்த இறைவன் அருள் புரிவார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக