About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 5 ஜூன், 2019

மணியடிக்கிறது இயற்கை

மனித நாகரிகம் சுமார் 2050 ஆம் வருடத்தில் முடிவுக்கு வரும் என்று வெளிநாட்டு ஆய்வாளர்கள் சொல்லியுள்ளனர். புவி வெப்பமாவதையும், பனி படர்ந்த எவரெஸ்ட் சிகரமும், ஆர்டிக் பெருங்கடல் உள்ள கண்டம் உருகிக்கொண்டு வருவதையும் வைத்து இவ்வாறு கணித்ததாகத் தெரிகிறது. போன வாரம் எவரெஸ்ட் மலையில் traffic jam இருந்ததால் நீண்ட வரிசையில் நின்று உச்சியை அடைவதற்கு நெடு நேரமானது என்று சர்வதேச மலையேறும் குழுவினர் சொன்னார்கள். கோடைக்காலத்தில் இத்தனைப் பேரும் ஒரே இடத்தில் நின்றிருக்க, பிராணவாயு குறைய உயரத்தில் வெப்பம் கூடியது.
பல வருடங்களுக்கு முன் அங்கு மலையேறச் சென்று வழியில் இறந்துபோய் பனிக்கடியில் புதைந்து போனவர்களின் உடல்கள் இப்போது வெளிப்பட்டு வருகிறதாம். அதோடு 11 டன் பிளாஸ்டிக் குப்பைகளும் உருகும் பனியில் அடித்து வருகிறதாம். இப்போது எவரெஸ்ட் மலையானது நாம் சாதாரணமாகப் பார்க்கும் குப்பைமேடு மலையை ஒத்துள்ளது.
ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன் தென்னாட்டு மகான் ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் தன்னுடைய காலக்ஞான தீர்க்கதரிசன நூலில் ஜனத்தொகையின் அழிவைப்பற்றி சொன்னதென்ன? இன்றைக்கு சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு புது டில்லியில் அணுகுண்டு விழும், பலகோடி மக்கள் மாண்டு போவார்கள். அதன்பின் நாட்டின் தலைநகரம் கருநாடகத்திலுள்ள ஹம்பி பட்டினமாக விளங்கும். அங்கும் அணுகுண்டு விழ, தென்னாட்டில் ஒரே நாளில் சுமார் 7 கோடி மக்கள் இறந்து போவார்கள் என்று எழுதியுள்ளார். அப்போது அதிகபட்ச வெப்பம் நீடிக்க, நீர் வறண்டுபோக, மரம் செடி புல் அனைத்தும் மடியும். இத்தாக்கத்தின் காரணமாக ஊழ்வினையால் பிறப்பெடுத்தவர்கள் தங்கள் பாவக் கழிவுக்கேற்ப அவ்வப்போது மாண்டு போவார்கள். பிறகு பஞ்ச பூதங்களுக்கு ஈசன் புத்துயிர் தர இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொண்டு எழும். இதுவும் பிரளயத்திற்கு சமம்.
ஆனால் நாமோ இங்கு இயற்கையைப் பேணாமல் சுத்தமாக அழித்துவிட்டு மொழிப்போர் புரிந்து வருகிறோம். வாழ்வாதார விஷயங்களைப் பற்றிச் சிந்திக்காத அளவுக்கு எல்லோருக்கும் சுபிட்சமாகத் தொப்புளுக்குமேல் கஞ்சி வழிகிறது!

Image may contain: ocean, sky, outdoor, text and nature

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக