About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

கீழடி: 5ம் கட்ட ஆய்வு

கீழடி அகழாய்வில் வெளிப்பட்டவை சுமார் கிமு.6 என்று ஒருவழியாக அறியப்பட்டுள்ளது. அதாவது இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உலகிற்கு தெரிய வந்துள்ளது. இப்போதைக்கு கார்பன் டேடிங் முறையில் அவ்வளவுதான் தெரிந்துள்ளது. ஆனால் இந்த கணக்கும் தவறு என்பேன். ஏன்? இன்னும் தென்கிழக்கு நோக்கி முன்னோக்கிப் போகவேயில்லை. அதற்குள் ஊரே இரண்டுபட்டால் எப்படி? இப்போது வரை தோண்டியது வெறும் ஒரு தெருவைச் சுற்றியுள்ள சிறு குடியிருப்பு. அவ்வளவுதான்!
என்னுடைய தனிப்பட்ட சித்தநூல் ஆய்வில் நான் கண்டுகொண்டதை இங்கே சொல்கிறேன். உள்ளே போகப்போக இன்னும் பல அதிசயப் பொருட்கள் இவ்வாய்வில் பரவசமூட்டும். ஒவ்வொரு கடல் கோளுக்கும் பிறகு ஊர் எல்லை பின்னோக்கி வந்துள்ளது. சுமார் பத்து காதம் உள்ளே சென்றால் நிறைய கட்டுமானங்கள் வெளிப்படும். அங்காடிகள், கூத்துப் பட்டறைகள், கோயில்கள், மண்டபங்கள் என இன்னும் பட்டியல் நீளும். ஊர் மையப் பகுதி இதுவரை ஆய்வில் வரவில்லை.
ஊர் கட்டுமானத்தின் சூத்திரதாரிகளான மயன் வம்சத்தாரின் பிரம்மபுரி இன்னும் வெளிப்படவில்லை. அக்குடியிருப்பு அறியபட்டால் கீழடியின் ஜாதகமே வெளிப்படும். அதன்பிறகு தோண்டிக் கொண்டுபோக எந்தவொரு அவசியமுமிருக்காது. குடிமக்கள் வாழத் தேவையான குடில்கள்; மேட்டுக் குடியினர் வாழ மச்சு வீடுகள் /நிலவறைகள், அடுக்குமாடி குடியிருப்புகள்; உரை கிணறு, குழாய் நீர் வசதியுடன் கழிவறை/குளியலறையுடன் பொருளாதார அடிப்படையில் Housing units வெளிப்படும். வீட்டில் புழங்க அத்தியாவசியப் பாத்திரங்கள், இரும்புச் சாமான்கள், வெல்டிங் பட்டறைகள், சகஸ்ரகும்ப மின்சார மின்கலன்கள்; தங்கம் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் நாணயச் சாலைகள்; வீடுகளுக்குத் தேவையான மரச்சாமான்கள் சாளரங்கள், கதவுகள் செய்யும் தச்சுக்கூடங்கள்; கொல்லர் பட்டறைகளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் கிடைக்கக் கூடியது ஸ்தபதிகளின் சிற்பக்கூடங்கள். ஆக இந்த ஐந்தொழில்களே பிரதானம்.
இது போக குயவர்மேடு, களத்துமேடு, உவர்புறம், பண்டக பறைச்சாலை, பாணர்கூடம், நர்த்தன களம், குடைவறைகள், பௌத்த விஹாரங்கள், வேள்விச் சேரிகள், வைத்திய சாலைகள், நாவாய் ஒடப்பகுதி, சுங்கச்சாவடி என இன்னும் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை எல்லாம் என் கண்முன்னே தெரிகின்றன. அநேகமாய் கீழடி மக்களின் கல்வியறிவு நம்மைவிட மிக நன்றாகவே இருந்துள்ளது. எழுதப் படிக்க வடிக்க அடிப்படை பிரம்மி கல்வியறிவு பெற்றிருந்தனர். பச்சை மண்பானை செய்து முடித்தபின் குயவன் அல்லாத வேறொருவன் வாசக எழுத்துக்களை வடித்தால் அதன் நேர்த்தி தெரிந்துவிடும். குயவனே அதை குச்சியில் எழுதி அதன்மீது களிமண் குழைத்த நீரைப்பூசி மிருதுவாக்கியதும் தெரிகிறது. தூண்கள் /அரண்மனைகள் /கோயில் இங்கெல்லாம் கல்வெட்டு வடித்த கல்தச்சரும், செப்புப்பட்டயம் வடித்த கன்னாரும் நிச்சயம் கை நாட்டாக இருக்கவே முடியாது. கல்வி கணிதம் திரிகோண சூத்திரம், கல்லில் உயிரோட்டம் காணும் சாஸ்திரம் எல்லாம் அறிந்தவராகத்தான் இருக்க முடியும். ஆக, நாம் நினைத்ததைவிட ஊர் மக்கள் அடிப்படை கல்வியறிவுடன்தான் இருந்திருப்பார்கள்.
ஒரே நேரத்தில் பல பகுதிகளில் முன்னோக்கி ஆய்வு செய்தால், இன்னும் பல தடயங்கள் கிடைக்கப்பெறும். என்னுடைய கணிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் ஆய்வுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களின் பழமை சுமார் 7000 வருடங்கள் வரை போகும். இனி நடப்பதை வேடிக்கைப் பார்ப்போம்!

Image may contain: one or more people and food

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக