About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 16 செப்டம்பர், 2019

பூமழை தூவி...

மாநகராட்சி குப்பை வண்டி பிரதான சாலையோரக் குப்பைத் தொட்டிகளிலிருந்த கழிவுகளைத் துப்புரவாக அள்ளி போட்டுக்கொண்டு நகர்ந்து போனது. அப்போது இறுதி ஊர்வலம் ஒன்று வந்து கொண்டிருந்தது. சவத்தின் மீதுள்ள மலர்களைப் பிய்த்து தெருவில் வீசியடிக்க அது பாதசாரிகள் மீது, வாகன ஓட்டிகள் மீது, பேருந்து ஜன்னலோரப் பயணிகள் தலையிலும் போய் விழுந்தது. எல்லோரும் ஆசிர்வதிக்கப்பட்டு தன்னியனானார்கள். 😎

குரங்கின் கைப்பூமாலையாய்  அதை பிய்த்துப் போட்டு சவத்தைக் கேவலப்படுத்துவது தமிழ்க்குடி கலாச்சாரமாம். சுத்தமாகப் பெருக்கிய சாலையில் திடீரென பட்டாசு வெடித்த காகிதமும் வெற்றிலை ஊதுபத்தி கட்டு மற்றும் பிய்த்துப்போட்ட பூக்களுமாகக் குப்பைகள் சிதறிக் கிடந்தது. மயானம் போய்ச் சேரும்முன் பாடையே காலியாகிவிடும் போலிருந்தது.

குவார்ட்டர் அடித்த நடன கோஷ்டி கைலியைத் தொடைக்கு மேலே தூக்கிக் கட்டியும் நுனியை வாயில் கவ்வியபடி தாளம் தப்பாமல் தம்போக்கில் அபிநயம் முத்திரை அடவு எல்லாம் காட்டியபடி குத்தாட்டம் போட்டு ஆடிக்கொண்டிருந்தனர்.

சமுதாய கலாச்சாரம் மாறிவரும் போக்கைப் பார்த்தால் சவத்தின் அங்கங்களை வழிநெடுகப் பிய்த்து வீசினாலும் ஆச்சரியமில்லை. 😂



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக