About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 23 செப்டம்பர், 2019

அமானுஷ்ய கதிரியக்க விஞ்ஞானி

அது 2007 பிற்பகுதி. டாக்டர். M.A. பத்மநாப ராவ் (82) என்பவருடன் நீண்ட உரையாடல் செய்ய அரிய வாய்ப்புக் கிடைத்தது. புதுடில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் கதிர்வீச்சு மருத்துவத் துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி. இவர் தியானம் செய்யும்போது அநேக இறை வடிவங்கள் இவர் கண்முன்னே வந்து நிற்பார்கள். இராமன், இராவணன், சூரியன், அனுமன், ஆதிசங்கரர், என்று பட்டியல் நீளும். இவர் மாலை வழிபாட்டுக்குப்பின் அமரும்போது இவருக்கு முன் மேஜையில் விரிக்கப்பட்ட டிராயிங் ஷீட் இருக்கும். தியானத்தில் இவருடைய மனத்தில் வந்து நிற்கும் சக்தியானது இவர்மூலம் படங்களை பென்சில் கொண்டு வரைந்திடும். எப்போதேனும் அரிதாக வண்ணத்தில் வரும்.
சூரிய தேவனே தன்னுடைய வெப்ப மண்டலத்தில் நடக்கும் பல நுட்பங்களைக் காட்டி உணர்த்திய தருணங்கள் ஏராளம். இதைக் கண்டறிந்து உலகிற்கு ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டார். Bharat Radiation என்ற தலைப்பில் பின்னாளில் 2015 ல் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். ஆனால் எட்டு ஆண்டுகள் முன்னமே என்னிடம் தன் ஆய்வு குறித்த கருத்தை விளக்கி என்னையும் கேள்வி கேட்டு பதில் சொல்ல வைத்தார். Particle Physics சம்பந்தப்பட்ட நுட்பமான கேள்விகளைக் கேட்டார். ஓரளவுக்கு பதில் சொன்னேன். சூரியனில் எப்படியான அணுவியல் இயக்க நிலைப்பாடு உள்ளது என்றார்? நான் நியூக்ளியர் ஃபியூஷன் என்று சொன்னேன். உடனே அவர், அதுதான் நடக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம்? என்றார். முதுகலை பட்டப்படிப்பில் அப்படித்தான் படித்தோம். ஆனால் என்னுடைய தனிப்பட்ட யூகத்தின்படி சூரியனில் அணுவுலைக்கான எல்லா அம்சங்களும் இருப்பதாகவே கருதுகிறேன். அங்கு கதிரியக்க யுரேனியமும் அபரிமிதமாகவேகூட இருக்கலாம். தொடர் எரிபொருள் இருந்துகொண்டே இருக்கவும், எரிபொருள் குறையாமல் யுகங்களாக நீடித்து வந்திருக்கலாம் என்றேன். Plasma Physics சம்பந்தப்பட்ட சில உதாரணங்களைச் சொல்லி அது ஃபிஷன் அல்ல ஃபியூஷன் தான் என்று சொல்லவும் சாத்தியம். ஆனால் மேல்நாட்டு விஞ்ஞானிகள் இதை ஏற்கமாட்டார்கள் என்றேன்.
Good. You got my point young man என்று சொல்லிவிட்டு மேலும் விளக்கினார். அகச்சிவப்பைவிட புறவூதா கதிர்கள்தான் உச்ச பட்ச வேகத்துடன் பூமியை நோக்கி பயணிக்கிறது. அதில் பீடா/காமா/எக்ஸ்ரே கதிர்கள் பரவி வரும். ஆனால் நமக்குக் கிடைக்கும் சூரிய ஒளி எல்லாமே சூரியனிலிருந்துதான் வருகிறதா என்றால் இல்லை. நடுவே வெவ்வேறு மண்டலங்களில் சிதறல் ஏற்பட்டு வெப்பம் கூட்டியோ குறைந்தோ வந்து சேரும். சரியாகச் சொல்ல வேண்டுமானால் பூமிக்கு 10கிமீ மேலேயிருந்துதான் சூரிய ஒளியே நமக்கு வந்து சேர்கிறது என்றார். இதற்கான நோபல் பரிசே அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. இதுபோல் தன்னுடைய பதினொன்று ஆய்வுகளை பற்றி மேலோட்டமாகக் கூறினார்.
சரி. நம் விஷயத்திற்கு வருவோம். உங்களுக்குள் அமானுஷ்யமாக இறை சக்திகள் வந்துபோவதும், நீங்கள் Auto writing மூலம் பல காரியங்களை சாதிப்பது எப்படி என்றேன். இராமனின் சேனைகள் சரியாக எங்கிருந்து சேதுவைக் கட்டினார்கள் என்பதை உங்களால் எப்படி மனக்கண்ணில் பார்க்க முடிந்தது? ஒவ்வொரு சர்கத்தையும் இராவணனுடன் நடக்கும் போரையும் நேரடி வர்ணனையாக நீங்கள் சொல்வது எப்படி? என்று கேட்டேன்.
அதற்கு அவர், “இராமன் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று தென்னகத்தில் சில திராவிட முட்டாள்கள் (Dravidian Party Fools) உளறுவதைப் பார்த்து வட இந்தியாவிலும் உளற ஆரம்பித்துள்ளனர். இராமன் வாழ்ந்தது திரேதா யுகத்தில் என்பது என்னுடைய காதுகளில் ஒலிக்கிறது. அந்த யுகத்தில் மானுட வாழ்நாள் என்பது பல்லாயிரம் வருடங்களைத் தாண்டியது. அதோடு தெய்வ அவதாரமும் கூடுவதால் ‘தசவர்ஷ சஹஸ்ரானி’ என்பது உண்மையே. வால்மீகி சரியாகத்தான் எழுதினார். ஆங்கிலேயர்கள் எதைத்தான் ஒப்புக் கொண்டனர்? Adams Bridge பற்றியும் அப்படித்தான் அவதூறு சொன்னார்கள். .
“சார், அந்த இறை வரைபடங்களைப் பற்றி..?” என்று நினைவூட்டினேன்.
“நான் தியானத்தில் இருக்கும்போது சப்தரிஷி மண்டலத்தின் ஆற்றலை உள்வாங்கிக் கொள்வேன். அப்போது சூரியன்,ராகு, கேது, செவ்வேள், குரு என கிரக தெய்வங்களும் வந்து நிற்பார்கள். ஆனால் சில சமயம் அசுரர் கூடமும் போலியாக இவர்களைப்போல் அந்நேரம் வந்து குறுக்கீடு செய்வதும் உண்டு. அதை இறை அனுகிரகத்தால் முறியடித்து என்னுடைய உடலை/ மனத்தை ஒத்துழைக்க அனுமதியாமல் இருந்து விடுவேன் என்றார். Surya helped me with colourful thermal image sketches that helped me to submit thesis broad என்றார்.
“சார், நீங்கள் இந்த சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கிறீர்கள்?” என்றேன்.
“நீ தினமும் வழிபாட்டில் என்னென்ன மந்திரங்கள் ஜெபிக்கிறாய்? எத்தனை முறை?” என்றார்.
“இதெல்லாம் போதாது. மந்திர வீரியம் பெருக தினமும் சஹஸ்ர முறை உரு போடவேண்டும். கடும் காய்ச்சலுக்கு கால் மாத்திரை தின்பது போல் உள்ளது நீ சொல்வது. எப்படி சித்திக்கும்?” என்றார்.
இதுபோல் எனக்குப் பல அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்குள் இரவுப் பொழுது வரவே. “My body pulls me to sit for auto writing. Before that I have to chant Gayathri. God bless you” என்றார். அதாவது, என்னுடைய உடல் பரவெளி ஆக்கர்ஷணத்தைப் பெறுகிறது. அதற்குள் நான் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து முடிக்கவேண்டும் என்றார். நானும் விடை பெற்றேன். அவருடைய ஓவியங்களை இன்னொரு சமயம் பதிவிடுகிறேன். இப்படிப்பட்டவர்களுடன் விட்டகுறை இருந்தபடியால் ஒரு மணிநேரம் ஆக்கபூர்வமாக உரையாட முடிந்தது.
Image may contain: 2 people, eyeglasses and closeup

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக