About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

கஜ-லக்ஷ்மி

என்னுடன் வேலை பார்த்த இராஜபாளையத்துக்காரர் ஒருவர் தங்களுடைய 15 கிரவுண்ட் நிலம் பல வருடங்களாய் விற்காமல் இருந்தது என்றும் அதில் எந்தவொரு செயலை மேற்கொள்ளலாம் என்று முயற்சி செய்தாலும் அது நடவாது போகும் என்று கூறினார். நிறுவனம்/பில்டர்/தனிநபர் என்று யார் வந்து பேசி முடித்தாலும் அது அடுத்த நிலைக்கு முன்னேறாமல் முடங்கிப் போகும் என்றார்.

அவர் தங்களுடைய கிராமத்துக் கோயிலில் குறி கேட்கப்போக வேண்டும் என்று ஒரு பெரியவர் அறிவுரைக் கூறினாராம். ஆனால் அவருடைய தந்தைக்கோ/ பங்காளிக்கோ/ இவருக்கோ அக்கோயில் எங்குள்ளது என்று தெரியாது. ஒரு வழியாக தெய்வம் எங்குள்ளது என்பதைத் தேடிப்பிடித்து அறிந்தனர். ஆனால் அதற்குக் கோயில் என்று எங்கும் கண்ணில் படவில்லை. அப்போது ஒரு விவசாய முதியவர் ஒருவர் அவ்வழியே போக, அவரை விசாரித்தனர். அவர் அதுபற்றிய தடயம் சொல்ல இவர்கள் போனது மலையடிவாரத்தில் புதர் மண்டயிருந்த ஒரு சிதிலமடைந்த சிறிய அம்மன் கோயில். உடனே உள்ளூர் ஆட்களை வைத்து சுத்தம் செய்து ஆடைச்சாற்றி தீபம் ஏற்றி வழிபட்டனர். அப்போது அவ்வூரில் ஒரு மருளாளி இருப்பதை அறிந்து அவரிடம் இவர்கள் பிரச்னையை சொல்லியுள்ளனர். அதற்கு அவர் 'உங்க நிலத்தில் ஒரு பசுவும் கன்றையும், யானையையும் ஒரு மண்டலம் வரைக்கும் வைத்து பராமரித்து வரவும். அது காலாட நிலத்தில் நடந்து வந்தால் பிரச்சனைத் தீரும்' என்றாராம்.

அதன்படி உள்ளூர் கோனாரிடம் பேசி அங்கே ஒரு கொட்டகை அமைத்துத் தந்து அவரை இருக்க வைத்தனர். ஒரு யானைப்பாகனை தொடர்பு கொள்ள ஐந்து வயது யானையை அங்கேயுள்ள மரத்தின் கீழே சங்கிலியிட்டு தீனிபோட்டு பராமரித்தார். சரியாக ஒரு மண்டலம் கழிந்தது. அதுவரை விற்காத நிலத்தில் இவர்களே ஒரு சிறிய ஷாப்பிங் காம்பிளக்ஸ் கட்ட வங்கியில் நிதி கிடைத்து இரண்டு ஆண்டுகளில் கட்டி முடித்தனர். எஞ்சிய காலி நிலத்தை வாகன பார்கிங்காக வாடகைக்கு விட்டனர். மாதாமாதம் நல்ல வருவாயும் வர ஆரம்பித்தது, கடனையும் அடைத்தனர் என்றார். 'அந்த யானையை விட்டுப்போக எனக்கு மனசில்ல சந்துரு. அது என்கிட்டே ஒட்டிக்கிடுச்சு. ஆனா யானைகட்டித் தீனிபோடுறது செலவுதான்னாலும் நல்ல பலன் தந்தது' என்றார்.

பசுவைத் தொட்டு வணங்கினாலும் உண்ண அகத்திகீரை தந்தாலும் நம் எல்லா தோஷங்கள் நீங்கும். யானையைத் தொட்டாலும், லத்தி விழுந்தாலும், துதிக்கை அபிஷேக நீர் பட்டாலும் சகல விதமான கண்திருஷ்டி ஏவல் செயவினைகளும் நீங்கும் என்பது சாஸ்திரம். அவர் யானைமுடி மோதிரமும் வலக்கையில் செப்பு வளையமும் அணிய ஆரம்பித்தார், வீட்டில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் கோமியம் தெளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்களாம்.


Image may contain: one or more people, outdoor and nature

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக