About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

இதுதான் நல்ல தருணம்!





"பொறியியல் கல்லூரியில் பகவத் கீதை விருப்பப் பாடமாக இருக்கக்கூடாது" என்று கருப்புக் கழகத்தினர் முழங்குகிறார்கள். ஆம், இக்கூற்று மிகவும் சரி. அதை விருப்பப் பாடமாக வைக்காமல் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும். பகவத் கீதையின் சில அத்தியாயங்களில் ஆழமான பொறியியல் சங்கதிகள் மறைந்துள்ளன. இதை ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் அலசி ஆராய்ந்து அதை சொந்தம் கொண்டாட தயாராக உள்ளது. பிறகு அக்கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமையும் வைத்துக் கொண்டு உலகையே ஆட்டிப் படைப்பார்கள்.
கடந்த அரை நூற்றாண்டாக அது கூடாது இது திணிப்பு என்று சொல்லியே எதையும் இங்கே மேற்கொள்ள விடாமல் தடுத்தனர். இன்று அதைப் படிக்கும் வசதி வாய்ப்பும் தேடல்களும் அருமையாக உள்ளபோது இவர்கள் முட்டுக்கட்டைப் போடுகின்றனர். மகாபாரதம் முழுக்க என்ன இல்லை?
கட்டுமானவியல், பொறியியல், அரசியல், போர் வியூகம், அஸ்திரங்கள், கதிர் வீச்சு, அணு ஆயுதங்கள், க்ளோனிங், காலப் பயணம், பரிமாணவியல், விமான சூத்திரம், தானியங்கி புரவிகள், போர் தற்காப்புப் பதுமைகள், ஸ்படிக கணினி, ஆளில்லா பறக்கும் வான் ரதம், மின்காந்த ஒலி அலைகள், தகவல் தொழில்நுட்பம், சப்த சூத்திரம், மின்னியியல், நீரியல், காற்றியில், வெப்பவியல் என எண்ணிலடங்கா பல நுட்பங்களைப் பற்றி நான் சொல்லிக்கொண்டே போகலாம். வேதத்தில் சொல்லப்பட்ட விஞ்ஞான சங்கதிகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த ஏனைய தலைப்புகளையும் ஒவ்வொரு ஆண்டு படிப்பிலும் கட்டாயமாக்க வேண்டும்.
இத்துடன் நின்று விடாமல் அகத்தியர் பன்னீராயிரம், போகர் பன்னீராயிரம் ஆகிய நூல்கள் மீதுள்ள தடையை நீக்கி, போகர் எழாயிரம் போல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கோணத்தில் அறிமுகம் செய்ய வேண்டும். தகுதியானவர்களை வைத்து உலோக/ மூலிகை ஜாலங்கள், ரசவாதம், கனிமவியல், மருந்தியல், செயற்கை இரத்தினக்கல், முன்னேறிய பொறியியல் சூத்திரங்கள், என பலதரப்பட்ட தலைப்புகளை ஆழமாக நடத்தலாம். இப்போது விட்டால் பின் எப்போதும் இவற்றைக் கற்க சமயம் வாய்க்காது. இப்போதே இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு என்ன பாட திட்டம் என்பதை பல்கலைக் குழு கூடி திட்டமிட வேண்டும். நான் இதை வரவேற்கிறேன்!
அயல்நாட்டிலிருந்து எனக்கு வரும் சில மின்னஞ்சல்களில் இது குறித்த சந்தேகங்களைக் கேட்டும், நான் ஆய்வு செய்தவரை பெருநூல் காண்டங்களில் அவர்களுக்குத் தேவையான ஆராய்ச்சி சங்கதிகள் எதில் உள்ளன போன்ற கேள்விகள் வருவதுண்டு. கல்லூரி புராஜக்ட் செய்வோர், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள், மற்றும் உதவி பேராசிரியர்களும் இப்பட்டியலில் அடக்கம். ஆனால் இங்கோ அதைப்பற்றிய எந்த பேச்சும் கூடாது என்ற நிலைதான் உள்ளது.
எல்லோருக்கும் மகாபாரதம் என்றதுமே சூதாட்டம், இசை, காதல், தியாகம், அர்ப்பணிப்பு, காம சூத்திரம், கற்பழிப்பு, குரோதம், பழி, என்பதைத் தாண்டி வேறு எதையும் சிந்திப்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக