About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 6 டிசம்பர், 2016

மனித உறவுகளைப் பேணுவோம் !

ஜெ. பிறந்து வளர்ந்தது பெரிய குடும்பத்தில் என்றாலும் சிறு வயது முதலே தனிமையிலே வளர்ந்து ஆளாகவேண்டிய நிர்பந்தம் இருந்துவிட்டது. தனக்கு பிடிக்காத சினிமா தொழிலில் நுழைய வேண்டிய கட்டாயம் எழுந்தது, பிறகு காலத்தின் பிடியில் அவர் பயணித்தார். அரசியல் வாழ்க்கை இவரை தன் சொந்தங்களுடன் நெருங்க விடாமல் செய்துது தான் கொடுமை. அவரே இந்தத் தனிமையை ஏற்றாரா / திணிக்கப்பட்டதா என்பது இன்றுவரை புதிர்தான்.
இப்படியும் ஒருவரால் தன் சொந்தங்களை ஒதுக்கி தனிமையில் இருக்க சாத்தியமா என்று நமக்கு எண்ணத் தோன்றும். இந்த வயதில் இப்படியொரு தனிமையா என்று பரிதாபப் படாதவர்களே இல்லை. இவருடைய வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடம்.
தனக்கென ஒரு குடும்பம் எற்படுத்திகொள்ளவில்லை என்று அவர் சொன்னாலும், பெரியம்மா, சித்தி, சிற்றப்பா, அக்காள், அண்ணன், தங்கை மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் என்று தான் பிறந்த குடும்பத்து உறவினர்கள் எல்லோரும் இருந்தும், இன்று யாரும் அவர் உடல் அருகில் இல்லாமல் தனிமையிலே கிடக்கிறார். உடல் தகனம் செய்யப்படாமல் அடக்கம் ஆகிறார். அவர் தலை எழுத்தும் ஜாதகமும் அப்படி!

தன்னை மற்றவர்கள் ஆட்டிப்படைக்கவும், ஆளுமை செலுத்தி அடிமையாக நடத்தவும் அனுமதித்தார். போயஸ் கார்டனில் ஜெயலலிதா இருந்து தங்கிக்கொள்ளட்டும் என்று   பெருந்தன்மையாக ஒரு அறையை அந்த உடன்பிறவா குடும்பம் ஒதுக்கிக்கொடுத்ததே பெரிய விஷயம். இப்போது போயி அந்த குடும்பத்தவங்களை குறைகூற என்ன இருக்கு? இப்படியுமா ஒரு முதல்வர் இருப்பார்? என்றுதான் வியக்கத் தோன்றும். கூண்டுகிளியாய் இருக்கவே ஆசைபட்டார் என்றுதான் அவர் சரிதத்தில் களங்கமின்றி குறிப்பிடவேண்டும். ஆம், வேறு எப்படிச் சொல்ல? 
திரளான ரசிகர்களையும் தொண்டர்களையும் சம்பாதித்த தங்கத் தலைவி, மனித உறவுகளை பேணாமல் விட்டது பெரிய நெருடலே! நாம் வாழும் காலம் கொஞ்சமே! அதனால் குடும்ப உறவுகளை அனுசரிப்போம் மன்னிப்போம் நேசிப்போம்.
சுமார் 25 ஆண்டுகளுக்குமுன் டிவி பேட்டியில் எல்லா விஷயத்தையும் மனம் திறந்து பேசினார். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

'சில்பகுரு' வி.கணபதி ஸ்தபதி (1927 - 2011)


இவரைப் பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று சிறப்புமிக்க பிரகதீஸவரர் கோயில் வடிவமைத்த குஞ்சரமல்லன் @ ராஜராஜ பெருந்தச்சனின் வம்சத்தில் வந்த மிகப்பெரிய சிற்பசாஸ்திர ஸ்தபதி. என் பார்வையில் இவர் ஒரு மகா ஜீனியஸ், விஸ்வகர்மா ஆசிபெற்ற ஒரு அருளாளர் என்றால் தகும். கணபதி ஐயாவின் மூதாதையரைப் பற்றி கோவில் கல்வெட்டில், "தச்சாசாரியார் வீர சோழன் குஞ்சர மல்லனான ராஜ ராஜப் பெருந்தச்சன்" என்று கூறுகிறது.
கணித பட்டதாரியான இவர், 27 வருடங்கள் மாமல்லபுர அரசு சிற்பக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். இவருடைய கைவண்ணத்தில் இந்தியா மற்றும் மேல் நாடுகளில் பல கோவில்களை வடித்துள்ளார். குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையும் இவர் வடித்ததே. இவர் பிரம்மரிஷி மயன் அருளிய 'ஐந்திறம்' நூலை வெளி உலகிற்கு தொகுத்துக் கொடுத்தவர்.பிரணவ வேதத்தைத் தொகுத்து அச்சிட சிரத்தை எடுத்தார். இவர் சொந்தமாக 'வாஸ்த்து வேதிக் டிரஸ்ட்' ஒன்றை நிறுவி, அதன் மூலம் ஆலோசனைக தந்தும், ஆய்வு நூல்களும் வெளியிட்டு வந்தார். ஜனாதிபதியிடம் பத்மபூஷன் & தலைச்சிறந்த 'சில்பகுரு' என்ற பட்டத்தையும் பெற்றார்.
ஐந்தாம் வேதமான பிரணவ வேதத்தைத்தான் இவர் 'வாஸ்து வேதம்' என்கிறார். அவர் எழுதிய எண்ணற்ற நூல்களில், ஆயாதி கணனம் Ayadi Calculation, ஸ்தபதிய வேதம், சங்ககால தமிழர் வேதம், Temple of Space Science, திராவிட கட்டிடவியல், வள்ளுவர் கோட்டம், குமரிக்கண்டத்தில் மயன், வாஸ்து பிரம்ம சூத்ரம் போன்ற இன்னும் பல நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். இவருடை மேல்நாட்டு மாணவியரான திருமதிகள். ஒல்கா, ஜெர்சி மெர்கே போன்றோர் இவர் பெயரை உலகளவில் பறைசாற்றி வருகின்றனர்.
அடுத்த மாதம் வெளிவரும் என்னுடைய நூலில், ஐயா அவர்களின் மேற்பார்வையில் அவர் மாணவி Ms.ஜெர்சி மெர்கே எழுதிய 'பிரபஞ்ச தோற்றமும் வாஸ்து விஞ்ஞானமும்' என்ற ஆங்கில கட்டுரையை மேற்கோள் காட்டி சில பகுதிகளை நான் கையாண்டுள்ளேன்.


இராஜராஜன் வளர்த்த விஸ்வகர்மா தொழில்கள்

தஞ்சை பெரிய கோவில் (எ) இராஜ ராஜேசுவரம் கோவிலை எழுப்பியவர் முதலாம் இராஜாராஜன். இவர் அரியணை அமர்ந்தது கி.பி.985. இவருடைய 29 ஆண்டுக்கால ஆட்சியில் 20 ஆண்டுகள் பேரரசை விரிவடையச் செய்வதிலேயே கழிந்தன. கடைசி பத்து ஆண்டுகள் இவர் கோவில் கட்டுவதிலும், கலை வளர்ப்பதிலும் கவனத்தை செலுத்தினார். கி.பி1014 ல் இவர் ஆட்சி முடிந்தது.
இந்தக் காலக் கட்டத்தில்தான் தமிழரின் கலைகள் வளர்ச்சியடைந்தன. காலம் காலமாக இருந்து வந்த சிற்ப, கட்டட, பொன்வேலை, இரும்பு உருக்கு அணுகு முறைகளில் மாறுதல் வந்தன. உலோகத்தை உருக்கி சிலைகள் செய்யும் கலை விரிவடைந்ததும் இந்த மாமன்னரின் கடைசி பத்து ஆண்டு ஆட்சியில்தான் என்பது குறிப்பிடவேண்டும். அங்கு ஒரு இடத்தில் பொன் வேலை நடந்ததாலோ / பொன், தானியங்கள் கிடைக்கும் களஞ்சியம் என்பதாலோ அது 'கஞ்சம்' / 'கஞ்சமலை' Ganjam என்றும் அழைக்கப்பட்டது. மொத்தம் 52 கோவில்கள் கட்டப்பட்டன். 66 படிமங்கள். அவற்றில் இராஜ ராஜன் அளித்தவை 23. தஞ்சை இராஜராஜீசுவரம் கோவிலின் சுவர்களில் உள்ள கல் வெட்டிகளின் வழியே அக்காலத்தில் பெண்டிரும் ஆண் மக்களும் அணி கலன்கள் பூண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. கல் வெட்டுகளில் காணப்படும் நகைகள் அக்க்லாலத்தில் நடைமுறையில் இருந்தவை.
கோவிலுக்கு அளிக்கப்பட்ட சிலநகைகளின் பெயர்கள் :-- ஏகவல்லி [கழுத்து அணி - ஒற்றைச் சரமாலை]காறை [கழுத்து அணி ], கச்சோலம் [ இடை அணி], கலாவம் [இடை அணி], காந்த நாண் புள்ளிகை [கழுத்து அணி], மோதிரம் [இரத்தினம் முத்து ], முத்து மாத்திரை [காது அணி], பஞ்சசாரி [ஐந்து சங்கிலி கொண்டது ] பதக்கம். என்கிறது. அதுபோக என்னென்ன நககைகள் எவ்வளவு எடையும், என்னவகை ரத்தினங்களும் இருக்கவேண்டும் என்றும் ஆணை பிரப்பிர்த்தாக கல்வெட்டுகள் சொல்கிறது.
தண்டவாணி (காலணி-சிலம்பு போல), காந்திகை ( கழுத்து அணி), மிஞ்சு (மெட்டி), கொப்பு ( காதணி),மகுடம், குதம்பை ( காதணி), பட்டம் (மகுடம்), பட்டக் காறை ( தாலியை கோர்க்கும் பூண் நூல்), சப்தசரி ( ஏழு சங்கிலிகள்), சிடுக்கு, சூடகம் (வளையல்), பாத சாயலம் ( கால் அணி), சூரி சுட்டி (நெற்றியில் அணிவது), வீரப்பட்டம் (தலையில் அணிவது), வாளி (காதணி), காறை கம்பி (காதணி), திருகு, மகரம் (காதணி), உருட்டு திரிசரம் ( கழுத்து அணி), தூக்கம் (காதணி), நயனம் கண்மூடி பொற்பூ, பொட்டு. பாசமாலை தோள் வளைதாலி, தாலி மணிவடம், தாழ்வடம், கடுதிரள் மணி, வடம்வளையல், வடுகவாளி, வடம்தோடு, திருவடிக்காறைகால், வடம்கால் மோதிரம், சன்ன வடம், திருகுகால், காறை மாலை என்று என்னென்னமோ இருந்துள்ளது. 
இதில் நாம் பெரும்வாரியான பெயர்களை கேள்விபட்டதுகூட இல்லை. (Antique jewellery) புராதான நகைகள் செய்யும் ஆச்சாரிகளுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. மூச்சுகாற்றில் சுழலும் மூக்குத்திகள் அன்றே செய்தனர் என்றும் தெரிகிறது. இதில் பல நகைளின் பயன்பாடு இப்போது வழக்கில் இல்லாது போய்விட்டது. ஆனால் சோழர் கால சிற்பங்களில் இவை எல்லாம் வடிக்கபட்டிருக்கும். அவற்றை நாம் பார்த்தால்தான் விளங்கும்.
அணிகலன்களை அணிவதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும், மருத்துவ ரீதியிலும், மனக் கட்டுப்பாடு ஏற்படுவதற்கும், உணர்சிகளை மட்டுபடுத்தவும் தக்கபடி வடிவமைக்கப்பட்டது என்று அறிகிறோம். பிரம்மிப்புதான் போங்க! 

 பின் குறிப்பு :- தஞ்சை பெரியகோயில் கட்டிய 'குஞ்சர மல்லன் ராஜராஜ பெருந்தச்சன்' ஸ்தபதியின் வழிவந்த குலத்தோன்றல்தான் காலஞ்சென்ற 'சில்பகுரு' டாக்டர் வி.கணபதி ஸ்தபதி என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை.   

வியாழன், 1 டிசம்பர், 2016

தங்க பாரதம்!


பண மதிப்பு ரத்தை அடுத்து தங்கத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் 62.5 பவுன் நகை வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண்கள் 31.25 பவுன் நகை வைத்திருக்கலாம். ஆண்கள் 12.5 பவுன் நகை வைத்திருக்கலாம். இந்த நகைகள், கணக்கு காட்டிய பணத்திலிருந்து வாங்கப்பட்டிருந்தால், விவசாய வருமானத்தில் இருந்து வாங்கப்பட்டிருந்தால் வரி விதிக்கப்படாது. பாரம்பரிய நகைகளுக்கும் வரி விதிக்கப்படாது:- மத்திய அரசு அறிவிப்பு.
இதெல்லாம் பழைய சட்டம்தான், திருத்தமில்லை என்கிறது மத்திய அரசு. இதை அமலாக்கம் செய்யவும், பணம் முடங்குவதை தடுக்க வருமானவரித்துறை புதுசா என்ன கபளீகரம் செய்யப்போகுதோ? வெள்ளி பஸ்பம், தங்கபஸ்பம் வித்தவங்களை /தின்னவங்களை பற்றி ஏதும் சொல்லலை.
அடுத்து உடனே வரவுள்ள அதிரடிகள் என்ன? நிலம் உச்சவரம்பு, பினாமி சொத்துகள், வீட்டு வாடகை உச்சவரம்பு சட்டம், போன்றவைகளில் கடுமையான அமலாக்க திருத்தங்கள் வரவுள்ளனவாம். வந்தாதான் சரி! வீட்டு ஓனர் தன் குடும்பம் நடத்த ஆகும் ஒரு மாத செலவை வாடகையா இல்ல இப்போல்லாம் வசூல் பண்றாங்க. 
பொற்கொல்லர்களிடம் தங்கம் கையிருப்பு, யார் யாருக்கு எத்தனை பவுன் செய்துகொடுத்தனர், PAN அத்தாட்சி நகல் பெற்றுக்கொண்டு நகை செய்து கொடுத்தார்களா என்று விபரம் கேட்டு இம்சிக்காதவரை சரி. வருமானத்திற்கு சம்பந்தமில்லாமல் இனி தங்கத்தை அதிகமாய் முடக்கிக்கொள்ள முடியாது. அப்படி தேவைபட்டால் அதிகப்படியான தங்கத்திற்கு வரி கட்டிகொள்ள வேண்டியதுதான். ஆனால் கல்யாண சீர், பூர்விக குடும்ப நகைகள், சேமிப்பில் வாங்கிய நகைகள் எல்லாம் இந்த இக்கணக்கில் வராது. இதன் காரணமாக ஒரு கட்டத்தில் தங்கம் விலை வீழ்ந்து கட்டுக்குள் வர, கோடிக்கணக்கான கீழ் நடுத்தர மக்கள் தங்கம் வாங்க ஏதுவாக இருக்கும். இது 3 மாதம் கழித்துதான் பலன் தரும். இரண்டு வருடங்களுக்கு முன்பே gold bond scheme வந்தது இதன் முன்னோடி. ஒரு குடும்பத்தில் எவ்வளவு தங்கம் இருக்கலாம் என கிட்டத்தட்ட ரேஷன் முறை வருகிறது. அனைவரும் இதனால் பயன்பெறுவர். இனிதான் பொற்கொல்லர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு... படு பிஸிதான்.

இன்றைக்கு ஜனத்தொகை 125 கோடி என்பதில் குறைந்தது 90% நடுத்தரம், 5% கீழ்தட்டு, 5% மேல்தட்டு. ஆக மொத்தத்தில் ஒரு 25% சிறார்+பணக்கார்கள் என்று நீக்கிவிட்டு பார்த்தாலும், என்ஜியது 75%. ஆக, விலை வீழ்ச்சி ஆனால், சுமார் 90 கோடி பேர் ஓராண்டில் தலைக்கு குறைந்த பட்சம் 5 கிராம் வாங்கினாலே, நினைத்து பார்க்க முடியாத அளவில் பொற்கொல்லர் தொழில் வாய்ப்பு கணிசமாகும். அந்த இறைவன் அருள் புரிவார்.



திங்கள், 28 நவம்பர், 2016

ரசவாத சித்தர் தங்கம்


பசுவின் கோமியம் அன்றாடம் வீணாகிப்போகிறது. பஞ்சகவ்வியம் செய்யவும். வீடு தெளிக்கப் பயன் படுத்துவதற்கும், சித்த வைத்தியத்திலும் போக வேறெதுக்கும் அன்றாடம் இது பயன்படுவதாய் தெரியவில்லை. ஆனால் இந்த கோமியம் செம்பை பொன்னாக்கும் வல்லமைப் பெற்றது. ஆச்சரியத்தோடு பார்கிறீங்களோ?
அதுபோல், ஆழ்கடலிலுள்ள அடர் பாசிகளும் இரும்பை /செம்பை, தங்கமாக்கும். இதிலுள்ள பாக்டீரியாக்கள் முதலில் நீர்ம தங்கமாய் மாற்றி பிறகு திடப்படுத்துகிறது.
ஓரிலைத் தாமரையின் வேறை ஒரு ஜான் அளவு வெட்டி, அதில் பழுக்க காய்ச்சிய குண்டூசியை (ஒரு ஜாமம் வரை) செருகி வைத்து எடுத்தால், அது செப்பு ஊசியாக மாறியிருக்கும்.
இதுபோல எத்தனயோ தாவரங்கள் செம்பை தங்கமாக்க எளிமையாய் உதவுகிறது என்பது சித்தர் பாடல்களில் உள்ளது. செம்பை தங்கமாக்க அவர்கள் பயன்படுத்திய வஸ்துதான் முப்பூ. இதனோடு பச்சிலை சாற்றை பிழிந்து அரைத்து அதை அந்த செம்பின் மீது பூசி, அதன் மீது மண் சீலை அப்பி, ஒரு ஜாமம் வரட்டி புடத்தில் வைத்து எடுத்தால் பத்தரை மாற்று பொன் கிட்டும். யாருக்கு? எல்லோருக்கும் அல்ல. தன்னலம் கருதாமல், பரோபகார எண்ணம் கொண்டு தர்மநெறி வாழ்வபவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்று சொல்கிறார். பலர் கையில் இருக்கும் பணத்தை கொட்டி, மூலிகைகளை பாஷாண்ங்களை அதிக விலை கொடுத்து வாங்கி தங்கம் செய்கிறேன் என்று முயன்று தோல்வி கண்டோரே அதிகம். அது சித்தர்களுக்கான 'பிறவித்' தங்கம் என்கிறார் போகர். கதிர்வீச்சு பௌதிக முறையில் இதை 'டிரான்ஸ்முடேஷன் ஆஃப் மெடல்ஸ்' என்போம்.
வலிமையான தங்க உலோகத்தை சங்குப்பூ தாவர சாறு கரைக்கும் வல்லமை பெற்றது. சூடு படுத்த அது பஸ்மம் / தவளம் போல் வெண்மை நிறமாய் மாற்றிடும். சில சமயம் கீழ்கண்ட மூலிகைகளின் தைலம் கூட அதில் பூசி வாத வேலை செய்யலாம்.
மேலே சொன்ன அந்த அதிசய மூலிகைகள் எவை? அவை: பொன்முசுட்டை, பொன்னின்னாவாரை, பொன்னூமத்தை, சிறியாநங்கை, பெரியாள், கருப்பு கோடாலி, சிவப்பு கொடிவேலி, போன்றவை. இதுபோல இன்னும் நிறைய உண்டு. இதற்கு மூலிகை பரிச்சயம் இருந்தால்தான் சரிப்படும். இதில் தோல்வி கண்டோரை பார்த்து "தங்கம் பண்றேன்னு பொய் சொல்லிகிட்டு திரியரானுங்கோ" என்று இன்றும் ஏளனமாய் பேசுபவர்கள் உண்டு. தங்களுக்கு கிடைக்காத போது ஒரு ஏக்கம் /கோபம் வருவது ஞாயம்தானே !
இவையெல்லாம் 'போகர் 7000 -சப்தகாண்டம் ஒரு பார்வை' (லியோ புக் பப்ளிஷர்ஸ்) என்ற நூல் நான் எழுதும்போது விரிவாகத் தெரிந்து கொண்டேன். நான் தங்கம் செய்ததில்லை, செய்ய எண்ணமில்லை, சற்றும் ஆர்வமில்லை. அதுவாக வாய்க்கப்பெற்றதால் என்னிடம் சித்தர் தங்கம் வந்தது.
எல்லோரும் எங்க கிளம்பிட்டீங்க? மூலிகையை தேடிப் பறிப்பதற்கா?

வியாழன், 24 நவம்பர், 2016

Divine photo -3

Yesterday I participated in the gruhapravesam function of my cousin in Bangalore. When I clicked the homam, there came a mesmerizing photo. Lord Muruga wearing a garland, holding a sharp Vel, hair style turban, peacock neck and head are neatly visible. Om Muruga! For the 4th successive time, gods have posed for my camera.

வெள்ளி, 18 நவம்பர், 2016

விஸ்வகர்மா புரோஹிதர்களின் உரிமைகள்




இளங்கோவின் சிலப்பதிகாரம் பாடல்கள் வாயிலாக சைவ சமய திருமணங்கள் எல்லாமே அந்தணர்கள் மறை ஓத நடந்து வந்ததைப் படித்துள்ளோம். அதில் அக்னி வளர்க்கப்படாத எந்தவொரு சடங்கையும் நம் சமயத்தில் கேள்விப்பட்டதில்லை. (சீர்திருத்தத் திருமணத்தில் கூட பகுத்தறிவு நாத்திகர்கள் தங்களை அறியாமலே தமிழ் மரபு என்று சொல்லி குத்துவிளக்கு ஏற்றி அக்னியை ஆவாகனம் செய்தபின் மங்கல நாண் கட்டச் சொல்லுகிறார்கள்.)
பண்டையகாலம் முதலே மறை ஓதும் அந்தணர்கள் வந்த படியால், ஏனைய வர்ணத்தவர்கள் மற்றவர்களை அழைக்கும் பழக்கம் குறைந்துபோனது அல்லது அறவே இல்லை என்று சொல்லலாம். இன்று விஸ்வகர்மா குல குடும்பங்களில் அதே குலத்து பண்டிதர்களை முன் வைத்து திருமண சடங்குகளை செய்விக்கும் முறை குறைந்து வந்துள்ளது.
விஸ்வகர்மா புரோஹித ஆச்சாரிகளின் உரிமையை நிலைநாட்டி சுமார் 200 வருடங்கள் முன்பே இது குறித்த வந்த ஒரு சுவாரஸ்யமான கோர்ட் தீர்ப்பை இங்கு பதிவிடுகிறேன்.
- எஸ். சந்திரசேகர்

வியாழன், 17 நவம்பர், 2016

Quiz - இங்கு பதிவிட்ட படங்களின் பின்னணி என்ன?

சிவபெருமான் தன்னுடைய தேகத்தின் இடபாகத்தை சக்தியோடும், திருமாலோடும் பங்கிட்டுள்ளபடி இரண்டு படங்கள் உள்ளது. இதில் ஏன் பிரம்மாவோ இந்திரனோ சூரியனோ சரஸ்வதியோ லக்ஷ்மியோ இடம் பெறவில்லை? அப்படியான படங்கள் பார்த்துள்ளோமா?
இதன் தாற்பரியம் பற்றி தெரிந்த விஸ்வகர்மா அன்பர்கள் கமென்ட் செய்யலாம். உங்களில் யாருடைய விடை சரி என்று நாளை கழித்து பார்க்கலாம். பின்னர் வரவுள்ள பதிவுகளில் இதைப்பற்றி ஆழமாகப் பார்க்கவுள்ளோம்.


Quiz- வினாவுக்கான விடை
------------------------------------------
கடந்த பதிவுகளில் சுயம்பு விஸ்வகர்மாவின் தோற்றம் பற்றி பார்த்தோம். அவரிலிருந்து வெளிப்பட்ட மற்ற ஜீவன்களும் அவரும் வெவ்வேறு இல்லை. அவரே எல்லாமாக உருவாக்கிக்கொண்டுள்ளார்.
சத்யோஜாத, வாமதேவ, தத்புருஷ, அகோர, ஈசான என்பவையே ஐந்து முகங்கள். இதில் பிரம்மா விஷ்ணு இந்திரன் ருத்திரன் சதாசிவம் தோன்றினார்கள். இதைத்தான் ஐந்து புத்திரர்கள் என்று பார்த்தோம்.
சக்திகளில் : இச்சா சக்தி லக்ஷ்மி (வாமதேவ), கிரியா சக்தி பார்வதி (சத்யோஜாத), ஞான சகத் சரஸ்வதி (அகோர), முகங்களிருந்து சிருஷ்டிக்கப்பட்டு வெவ்வேறு விதமாகப பிறந்து உருவெடுத்தனர். இவர்கள் எப்படியெல்லாம் வந்து பிறந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
விஷ்ணுவும் பார்வதியும், வாமதேவ முகத்திலிருந்து பிறந்ததால் அவர்கள் உடன் பிறப்புகள். சிவன் தன் இடப்பாகத்தை சக்திக்கு அளித்ததால், அதே பாகத்தை விஷ்ணுவுக்கும் அளித்தார். அதனால் தான் இந்த மாதிரி படத்தை மேலே பார்க்கிறோம். "ஓம் சிவாத்மிகாய நமஹ" என்கிறோம். அதாவது 'சிவனின் ஆத்மாவாக இருப்பவர்' என்பதாகும். அது பொதுவாக, விஷ்ணு- பார்வதியை குறிக்கும். விஷ்ணுவுக்கு பார்வதி உறவு என்பதால் பார்வதிக்கு 'கிரிஜா' என்ற பெயருண்டு. அதாவது விஷ்ணுவின் உடன்பிறப்பு என்று பொருள்.
சிருஷ்டித்த சக்திகளை வெவ்வேறு முறைகளில் பிறப்பெடுக்க வைத்தார் ஈசன். எல்லா சக்திகளும் விஸ்வகர்மாவுக்குள்ளேயே தோன்றி, உறவுகள் கொண்டாடி, மீண்டும் அவருக்குள்ளேயே ஒடுங்குகிறது. நிறைய கதைகளில் சரஸ்வதியானவர், பிரம்மாவின் மகளா, மனைவியா என்று கேள்விகள் எழும். எந்த உறவானாலும் அது விஸ்வகர்மாதானே?
நாம் நம் ஒவ்வொரு பிறப்பிலும், நம்முடைய சொந்த பந்தங்களுக்கு தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக, மனைவியாக, மருமகனாக, இப்படி பல ஜென்மங்கள் எடுக்கிறோம். இந்த ஆத்மா பல உறவுகளை எடுக்கிற போது, விஸ்வகர்மாவும் பல சக்திகளை உருவெடுத்து பல உறவுகளாகக் காட்டியுள்ளார். அதெப்படி நீங்களே அப்பாவாகவும் கணவனாகவும் மகனாகவும் வருவீங்க? என்று யாராவது கேட்டால், முதலில் உங்களுக்கு சிரிப்பும் கோபமும் வரும், பிறகு இந்த தாற்பரியம் புரியும்போது அஞ்ஞானம் விலகும். (மறுஜென்மம ஊழ்வினை போன்ற கான்செப்டில் நம்பிக்கை இல்லாதோருக்கு இந்த சங்கதி சுத்தமாகப் புரியாது. அதனால் கிண்டல் செய்வார்கள்.) இப்படியாக, தானே நம் ஆத்மாவாக நம்முள்ளிருந்து பிறந்து புருஷ-ஸ்திரீ உறவுகளை மாற்றிப்போட்டு விளையாடுகிறார்.
அப்படியிருக்க தெய்வங்ளுக்குள் சொந்தங்கள் பற்றி சர்ச்சை எழுப்புவது 'சும்மா' என்பது நமக்குத் தெரிகிறது. இறைவனே எல்லாமாக உருவாகிக்கொண்டு ஐந்து தொழில்களை நடத்தி வருகிறார். நாதமும் பிந்துவும் விஸ்வகர்மாவுக்குள்ளிருந்து தோன்றி பிரபஞ்ச இயக்கத்தில் வெவ்வேறு உறவுகளும் பணிகளையும் தந்து புரியவைக்கிறார்.
திருப்பதியில் 'முருகனுக்கு அரோகரா' என்றாலும், பழனியில் 'கோவிந்தா கோவிந்தா' என்றாலும், சமயபுரத்தில் 'ஓம் நமச்சிவாய' என்றாலும் ஒரு தவறுமில்லை. (அப்படி மாற்றிச சொல்லும்போது, இவ்விவரம் எதுவும் தெரியாதவர்கள் அதைக் கேட்டால் சிரிப்பார்கள்.) இப்போற்றிகள் எல்லாம் பரசிவனையும்- பரசக்தியையும சென்றடைகிறது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்ததா?
பின்னொரு சமயம் ஒவ்வொரு முகம் பற்றி ஆழமாகப் பார்ப்போம்.

விஸ்வகர்மா குலத்தில் பிறக்க புண்ணியம் வேண்டும்

பஞ்சக்ருத்யம் எனப்படும் ஐந்து தொழில்களை விராட் விஸ்வக்ரம சதாசிவர் புரிந்து வருகிறார். இவருடைய மனைவியே விஸ்வப்பிராம்மணி (காயத்ரி) . அவருடைய பஞ்ச முகத்திலிருந்து தோன்றியவர்களால் ஐந்து ஆக்கப் பூர்வ தொழில்கள் படைக்கப்பட்டது. கொல்லர், தச்சர், கன்னார், ஸ்தபதி, தட்டார், ஆகிய பிரிவுகள் தோன்றின. ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு வேதத்தை (சாகை), ரிஷியை, பஞ்ச பூதத்தை, சூத்திரத்தை, கோத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு, ஹோமம் வளர்த்து, திரிபுண்டரம் இட்டு, பூணூல் அணிந்து விஸ்வகர்ம காயத்ரி மந்திரம் ஜெபித்து தங்கள் ஆசார அனுஷ்டானங்களை கடை பிடிப்பது சம்பிரதாயம்.
ஆனால் இன்று அவையெல்லாம் அடியோடு மாறிப்போய் அழிந்துவிட்டது. நிறைய விஸ்வகர்மா குலத்தினர் புலால் உண்டும் வேண்டாத செயல்களிலும் ஈடுபடுவதைக் காண்கிறேன். அவர்களுடைய ப்ரவரம் (அபிவாதனம்) தெரியாமல் உள்ளனர். ஏன்? காலத்தால் பொருளாதார வீழ்ச்சியும், வம்சங்கள் வழியே சொல்லி கொடுக்க யாரும் இல்லாமல் போனதும், நவ நாகரிகத்தின் வெளிப்பாடும், இவற்றுக்குக் காரணம்.
விஸ்வகர்மா குலத்தினரே விழித்து எழுங்கள்.! ஆன்மிக எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது. உலகின் ஓட்டத்தை சீராக்கியும், பாரத்ததின் அத்வைத பீடங்களை நிர்வகிக்கும் மடாதிபதிகளாகவும் வரவுள்ளீர்கள். இனி வேதம் கற்றுக்கொள்ளுங்கள். திருமால் 'கல்கி' அவதாரம் எடுக்கபோவதே உங்கள் குலத்தில்தான். பிரபஞ்சத்தை சிருஷ்டித்த மயன் வம்ச சுடர் நீங்கள்தான். குமரிக் கண்டம் (எ) லெமுரியாவின் ஊர் கட்டுமான பணியை வாஸ்துபடி வடிவமைத்ததே மயன் பிரம்மரிஷி என்பதை மறவாதீர். கர்ம சாரம்படி சாபங்கள் விலகி இனி வரும் கலியுகத்தில் நீங்கள் பிரகாசிப்பீர்கள். விஸ்வகர்மா குலத்தில் பிறந்தற்கு பெருமை படுங்கள். பூர்வ புண்ணியம் செய்யாமல் மாயன் வம்சத்தில் ஜனிக்க முடியாது.
"விஸ்வகர்ம குலே ஜாத கர்ப பிராமண் நிஸ்ச்சயம், சூத்ரத்வம் நாஸ்தி தத பீஜம் பிரார்த்னம் விஸ்வகர்மனஹா |" என்று மனஸரா சில்ப சாஸ்திரம் சொல்கிறது. அதாவது "பிறப்பால் விஸ்வ பிராமணனின் பீஜத்தை சூத்திரதுவம் அண்டுவதில்லை" என்கிறது. இக்கூற்றின்படி விஸ்வ பிராமணர்கள் அனைவரும் பிறப்பால் 'பிராமணர்களே'. தேவ பிராமணர்கள், பௌருஷேய பிராமணர்கள் என்றும் அழைக்கபடுவர்.
நீங்கள் எல்லோரும் யஞ்யோபவீதம் உபநயனம் மூலம் பூணூல் போட்டுள்ளீர்கள் (?) என்று நினைக்கிறன். இனி தினம் காலையில் குளித்து முடித்ததும், இறை வழிபாடு செய்து கிழக்கு முகம் நோக்கி அமர்ந்து கீழ் காணும் விஸ்வ காயத்ரி 54 (அ) 108 முறையேனும் ஜெபிக்கவும்.
“ஓம் விராட்புருஷாய வித்மஹே விஸ்வகர்மனாய தீமஹி தந்நோ பரப்பிரம்ம ப்ரசோதயாத்.”
என் குருநாதர் சித்தர் போகர் பிறப்பால் பொற்கொல்லராக இருந்தும் மேற்படி ஐந்து தொழில்களையும் செய்துள்ளார். அவர் ஆசியுடன் எழுதி அடுத்த மாதம் வெளிவரவுள்ள பெரிய நூலில் இதன் பெருமைகளைக் கூறியுள்ளேன். வெளியீடு பற்றி விரைவில் பதிவிடுவேன்.
ஏனோ திடீரென்று என்னுள் ஒரு சிந்தனை எழ, இதை தட்டச்சு செய்து பதிவேற்றினேன்.
- எஸ்.சந்திரசேகர்
Image may contain: 1 person

வெள்ளி, 14 அக்டோபர், 2016

வண்ண விளக்கில்..




அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோயில் வண்ண விளக்கில்...
இன்று மாலை என் அன்பு நண்பர் சிவாவுடன் சென்றேன். பக்தர்கள் கூட்டத்தோடு வரிசையில் நின்று தரிசித்து, முருகனுக்கு சந்தன காப்பு முடிந்து சோடச உபசாரங்கள் கண்டோம். விபூதிப் பிரசாதம் வாங்கிக் கொண்டபின் பிரகாரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பிறகு, புறப்படும் நேரத்தில் ஏதோ என் சிந்தையில் தோன்ற "சிவா, உள்ளே சென்று முருகனை மீண்டும் தரிசித்து வருவோம்" என்று சொல்லிக் கொண்டே மூலவரை அருகில் தரிசிக்க முன்னே செல்ல, அங்கிருந்தோர் எதுவுமே கேட்காமல் கதவை திறந்து எங்களை உள்ளே விட, விஐபி தரிசனமே கிட்டியது. கருவறை முன் சில நிமிடங்கள் நின்று தரிசித்தோம். அங்கு புனைந்த பாடலே இது.
"வல்வினை போக்கும் பழனி முருகா
வள்ளி மணாளா செவ்வேள் அழகா;
வல்லமைத் தாராய் கலியுக வரதா
வீரபோகா அருள்செய் குருநாதா
."
எங்களை உள்ளே வருமாறும், எங்களுக்காக அவர்கள் சிறப்பு தரிசன கதவை திறக்கவேண்டும் என்று பணித்தானோ? வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! எல்லாம் முருகனின் செயல்.