About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 3 ஜூன், 2020

பூசாரியும் சிவாச்சாரியாரும்!

எல்லா ஜாதிகளிலும் பூசாரிகள்/ அர்ச்சகர்கள் உண்டு. தமிழகத்தில் சன்மார்க்கம் பின்பற்றும் கோயில்கள் வேதம் சார்ந்த/சாராத என வகைப்படும். பகுத்தறிவு கழகவாதிகளுக்கு இது என்றுமே புரிந்ததில்லை. அவர்களுடைய கோஷமான 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும்' என்பதில் அர்த்தமில்லை. இது காலங்காலமாக நடைமுறையில் இருப்பதுவே. 

ஒரு கிராம மாரியம்மன் கோயிலானது அவ்வூரிலுள்ள பிராமணர்களின் குலதெய்வ கோயிலாகவே இருந்தாலும்கூட அங்கு பண்டாரங்களே பரம்பரை பூசாரிகள். இதுபற்றி எதுவும் அறியாத கழகத்தார் கோஷம் போடுகிறார்கள்.

இது இப்படி இருக்க, ஆரிய வேத ஆகமத்தையும் சமஸ்கிருதத்தையும் விரும்பாதோர் எப்படி சிவ/வைணவ கோயில்களில் சிவாச்சாரியார்/ பட்டாச்சாரியார் ஆக முடியும்? இடிக்கிறதே! பூணூல் நுண்சிகை நீறணிதல் காயத்ரி பற்றிய முக்கியத்துவத்தை அகத்தியர் திருமூலர் போகர் ஓரே மாதிரி சொல்லியுள்ளனர்.

கழகத்தினர் குடும்பத்தில் ஏன் இதுவரை ஒருவர்கூட வேத அத்யயனம் மேற்கொண்டு கோயிலில் அர்ச்சகராகவில்லை? 😂


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக