About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 11 ஜூன், 2017

அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம்

முன் எப்போதோ இது பற்றி படித்திருந்தாலும், அவ்வப்போது மறந்துபோவது இயல்பு. இன்னும் சொல்லப்போனால், இதுபற்றி நம்மை யாரேனும் விளக்கம் கேட்கும்போது சற்று குழப்பும். ஏன் அப்படி? சிவன்-திருமால்; சைவம் -வைணவம், வேறுபாடின்றி வணங்கி வருகிறோம். 'எல்லாம் ஒன்றே' என்ற தத்துவத்தை நாம் கொண்டுள்ளதால், நம் மார்க்கம் என்னவென்று அறியத்தேவையின்றி இருக்கிறோம். இறைவன் என்ற பரபிரம்மம் உள்ளதை ஏற்கிறோம். அது நம்முள் இருந்தால் என்ன? வெளியில் இருந்தால் என்ன? என்ற நிலையில் உள்ளோம்.  உண்மைதானே?

அத்வைதம் (ADVAITHAM)
அத்வைதம் (அ + துவைதம்) அதாவது இரண்டற்ற நிலை, ஏகம். சீவன் என்னும் (ஜீவாத்மா) என்பதும் சிவன் (பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும், சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்று கூறுவது அத்வைதம். சங்கரர் தான் முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இதன் சாரம், 'பிரம்மம் ஒன்றே'.  பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபடாத நிலை.

துவைதம் (DHVAITHAM)
துவைதம்- துவி என்றால் இரண்டு. பிரபஞ்சமும், பரமாத்மாவும் வேறானவை. பரமாத்மா தனி, மற்றவை அதில் சேராதவை என்பதாம். பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம். இதை பரப்பியவர் மத்துவர்.

விசிஷ்டாத்வைதம் (VISISHTA-ADWAITHAM)
இவ்வேதாந்த நெறியை உலகிற்கு அளித்தவர் இராமானுஜர். விசிஷ்டம் - விசேஷம். விசிஷ்டாத்வைதமானது, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும், ஜீவாத்மா என்பது பரமாத்மாவிலிருந்து தான் வெளிப்பட்டது என்று கூறுகிறது.

                    Image may contain: 1 person

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக