About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 14 ஜூன், 2017

ஆதி சங்கரரின் காலம் எது?

கேரள மாநிலம் காலடியில் ஆதிசங்கரர் வசித்த இல்லத்திலிருந்து சிறிது தொலைவில் பூர்ணா நதி ஓடிக் கொண்டிருந்தது. சங்கரரின் தாயாரான ஆர்யாம்பாள் நித்தமும் பூர்ணா சென்று நீராடித் திரும்புவது வழக்கம். ஒரு நாள் ஆற்றில் நீராடி விட்டு இல்லம் திரும்பும்போது தள்ளாமையின் காரணமாக வழியில் மயங்கி விழுந்து விட்டார் ஆர்யாம்பாள். இதை அறிந்த சங்கரர் கவலைப்பட்டார்.
இனி பூர்ணா செல்ல வேண்டாம். இல்லத்தில் இருக்கிற கிணற்றிலேயே நீராடுங்கள்என்று தன் தாயாரிடம் சொன்னார் ஆதி சங்கரர்.
ஆனால், ‘என்ன சிரமப்பட்டாலும், நான் இருக்கின்ற வரை பூர்ணாவில்தான் நீராடுவேன்... அது எத்தனை பெரிய பாக்கியம்என்று மகனை சமாதானப்படுத்தினார் தாயார். அப்போதுதான் ஆதி சங்கரர் கங்காதேவியைப் பிரார்த்தித்துப் பாடல் பாடி, அந்தப் பூர்ணாவையே தனது இல்லம் இருக்கும் பக்கத்துக்குத் திருப்பினார்.
ஆதி சங்கரரின் அவதாரப் பெருமையை நிரூபிக்கும் விதமாகவும், அவரது சந்நியாச தர்மத்துக்கும் கட்டுப்பட்டு பூர்ணா நதியே தன் பாதையைச் சற்று மாற்றிக் கொண்டு பாய ஆரம்பித்தது. திடீரென தன் வீட்டருகிலேயே பூர்ணா ஓடத் துவங்கியதும், ஆர்யாம்பாளுக்கு சந்தோஷமான சந்தோஷம். 

நீண்ட காலமாகவே ஆதிசங்கரரின் குலம், பிறப்பு வருடம் குறித்து ஒரு சர்ச்சை இருந்து வந்தது.
ஒருமுறை சங்கரர் தேச சஞ்சாரம் மேற்கொண்டு ஆந்திராவின் மசூளிபட்டணம் வரும்போது, அங்கே இவரைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள். அப்போது “ஆச்சார்யோ சங்கரநாமோ துவஷ்டா புத்ரோ நசன்சய விப்ரகுல கௌரார்டிக்க்ஷ விஷ்வகர்மந்து பிராம்மண” என்று உரைக்கிறார். அதன் பொருள், 'சங்கரனான நான் துவஷ்ட பிராமணின் புதல்வன், விஸ்வகர்மா எனது குலம்' என்று உரைக்கிறார்.  

இந்துமத மேன்மையை நிலைநாட்ட, ஆதிசங்கரரின் காலத்தை ஈராயிரம் வருடங்களுக்கு முந்தயது என்று கட்டுக்கதை திரிப்பதாக பல நாத்திக மதவாத கட்சிகள் அவதூறு பரப்பின. காஞ்சி மடத்திற்கு வந்த ஒரு தலைசிறந்த புவியியலாளரைக் கொண்டே அதை நிரூபிக்கக் எண்ணினார் காஞ்சி மகாசுவாமி. ஆதிசங்கரர் தேவ பிராமணரா, தவிச பிராமணரா? என்ற சந்தேகம் உண்டு. ஆனால் அவரே, 
ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்தில்தான் பூர்ணா நதி திசைமாறி அவரது இல்லம் அருகே பாய்ந்தது. ஆக, இங்கே பாய்கின்ற பூர்ணாவின் மண்ணை சோதித்துப் பார்த்தால், ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் உறுதியாகத் தெரிந்து விடும். நான் சொன்ன இந்த ரெண்டு எடத்துலேர்ந்து மண் எடுத்துக்கோ. கார்பன் டேட்டிங்’ (Carbon dating பழங்காலப் பொருட்களின் வயதைக் கண்டுபிடிப்பது) முறைப்படி ரெண்டு மண்ணோட வயசையும் கண்டுபிடிச்சு எனக்குச் சொல்லு’’ என்று தெள்ளத் தெளிவாகச் சொன்னார் மகா பெரியவா. அந்தப் புவியியலாளரிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்து, உலகத்துக்கு ஒரு உண்மையை வெளியிட்டார் மகா பெரியவா. கொஞ்ச நாள் கழித்து ரிசல்டுடன் வந்தார்.

காலடிக்குள் பூர்ணா நுழைவதற்கு முன் நதியின் வயது ஒரு லட்சம் வருடம். காலடிக்குள் நுழைந்த பின் சங்கரர் இல்லம் அருகே எடுத்த மண்ணுக்கு 2,500 வருடம்எனவே, ஆதி சங்கரர் அவதாரம் செய்து 2,500 ஆண்டுகள் ஆகி விட்டன என்பது ஊர்ஜிதம் ஆயிற்று. ஆதி சங்கரர் இந்த பூலோகத்தில் வாழ்ந்தது 32 ஆண்டுகளே. ஆதி சங்கரரின் அவதார தினம் மற்றும் ஸித்தி தின ஸ்லோகங்களை வைத்து, அவர் வாழ்ந்த காலத்தை மகா பெரியவா வெளியிட்டார். சங்கரர் அவதாரம் செய்தது கி.மு. 509-ஆம் ஆண்டு என்றும், அவர் ஸித்தி ஆனது கி.மு. 477-ஆம் ஆண்டு என்றும் அந்த மகா சபையில் மீண்டும் ஒருமுறை பிரகடனப்படுத்தினார்.

ஆனால், ஸ்ருங்கேரி மடத்தில் கிபி.7ம் நூற்றாண்டிற்கு பின்னர் வந்த மடாதிபதிகள் பற்றிய செப்பேடுகளும் ஆவணகளும் இருக்கிறது. அப்படி என்றால் அதற்கு முன் இருந்த ஆவணங்கள் களப்பிரர் காலத்தில் அழிக்கப்பட்டதா அல்லது ஆவணங்களே பராமரிக்கப்படவில்லையா என்று அறிந்து கொள்ள முடியவில்லை.
ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மகாசுவாமி  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக