About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 27 ஜூன், 2017

'நான்' சொன்னா தப்பா சாமி?

ஆன்மிகம் பொறுத்தவரை 'நான்' என்று சொல்லக்கூடாது. அது அகம்பாவம் ஆணவத்தை குறிக்கும் சொல் என்கிறார்களே. இது உண்மையா? என்று ஒரு வாசகர் கேட்டார்.

நான் என்ற சொல் எப்போதுமே கர்வத்தையே வெளிப்படுத்தும் என்று சொல்ல இயலாது. நான் என்பதை நான் என்றுதான் சொல்லவேண்டிய இடத்தில் சொல்லியாக வேண்டும். யான், யாம், அடியேன் என்ற சொற்களை கர்வம் ஆணவம் வெளிப்படுமாறு சொல்ல முடியாதா என்ன? அதிலும் உருட்டல் மிரட்டல் செருக்கோடு சொல்லலாமே! எதுவுமே சொல்லப்படும் குரல் தொனியிலும், பார்வையிலும், மனதின் வெளிப்பாட்டிலுமே உள்ளது. எப்போது ஒருவன் தன் வெற்றியைப் புகழ்ந்து பலமுறை சொல்லி இறுமாப்பு கொள்கிறானோ, அப்போது இது தற்பெருமை பீற்றுதல் அகம்பாவம் என்று உணரப்படுகிறது.. ஆக, இது சொல்பவன் /கேட்பவன், இரு மனோ நிலைப் பொறுத்தே அறியப்படுகிறது.

எல்லோருக்கும் 'நான் யார்?' என்ற சுயம்தேடலை அறியத் தகுதியுண்டு. அவனுக்குமுன் எல்லோருமே பிரபஞ்ச வெளியில் மெய்ஞானம் தேடி அலையும் பரதேசிகள்தான்.. 'நான்' என்பது, ஆன்மா இயக்கும் உடல் என்ற பொம்மை. அதனுள் பஞ்ச பூதங்களும் இந்திரியங்களும் அடங்கும்.. அந்த 'நான்' என்பதை சிவன்தான் சீவன் என்ற மூச்சு கொடுத்து இயக்கிக்கொண்டு இருக்கிறார். அந்த ஆன்மா இருப்பதால் இந்த உடல் என்னுடையது, நான், எனது என்ற உணர்வை மனதால் அறிய முடிகிறது. அது அகம்பாவமா, தன்னடக்கமா  என்பது அந்த உடலை மனதை இந்த ஆன்மா எப்படி ஆட்டுவித்து வழி நடத்துகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.

நீதிபதி: கோயிலில் திருடிய குற்றத்தை நீ ஒப்புக்கிறியா?
கட்சிக்காரர்: ஆம். அதை நாமே செய்தோம்.
வக்கீல்:  ஏன்யா உன்னோட என்னையும் கூட்டு சேர்த்துக்கற? நான்தான் செய்தேன்னு சொல்லிட்டுபோ.. பக்தியும் பணிவுமா குற்றத்தை ஒத்துகற மூஞ்சிய பாரு... உனக்காக வாதாடினதே தப்பு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக