About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 8 ஜூன், 2017

சிவஜோதியில் வந்து கலந்திடுங்கள்

சம்பந்தன் பூரணாம்பிகை மணக்கோலம் காண்
சுற்றம்சூழ நல்லூர் பெருமண வைபவம் காண்;
அம்பலத்தான் அருளாசி அசரீரி ஒலிக்கக் காண்
அகமகிழ்ந்தோர் ஜோதியில் புகுவதைக் காண்;
விண்ணவர் மலர்ச்சொரிய வரவேற்கக் காண்
வந்தோர் யாவருக்கும் வீடுபேறுகிட்டக் காண்;
பண்ணவர் திருநீலர் நாயனார்கள் ஓதக் காண்
பைந்தமிழ் தேவாரம் திருமுறை பதியக் காண்.
ஈசனின் பதியொளிர ஐந்தெழுத்து செபிக்கக் காண்
இம்மையும் எம்மையும் அறுபட்ட தருணம் காண்;
தாசனின் பேற்றினில் உற்றார்கள் மகிழக் காண்
தயாபர தோணிபுரத்தான் திருவிளையாடல் காண்
.
             (இது அடியேன் புனைந்த கவிதை.)
நல்லூர் கோயில் (ஆச்சாள்புரம், நாகப்பட்டினம்) கருவறையில் ஈசன் ஜோதியாய்த் தோன்றி அசரீரியாக திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி திருஞானசம்பந்தப் பெருமான் தன் திருமணத்திற்கு வந்தோர் அனைவரையும் சிவ ஜோதிக்குள் இட்டுச்சென்றார். அவர்கள் அனைவரும் கைலாசபதியில் ஈசனில் கலந்தனர்.
அப்போதுதான்;
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாய மே
.”
என்று தொடங்கும் நமச்சிவாய பதிகத்தைப்பாடி தன் மனைவியுடன் சம்பந்தப்பெருமான் சிவஜோதியில் கலந்தார்.. இதை படிக்கும்போது உங்கள் உடலில் இப்போது தெய்வீக அதிர்வலை உணரமுடிகிறதா? ஓம் நமசிவாய!
ஆம், திருஞானசம்பந்தரின் மணநாளும் ஆராதனை (குருபூஜை) விழாவும் ஒரே நாளில் வரும். அத்திருநாள், வைகாசி –மூலம்.. ஜூன் 10.
Image may contain: one or more people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக