About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 20 ஜூன், 2017

சிவரகசியம் நிறைந்த மரபணுக்கள்

நேற்று முகநூலில் ஒரு ஆய்வு பற்றி படித்தேன். "ஆரியப்படையெடுப்பு நடந்தது என்றால் யார் ஆரியர்கள் அவர்களின் மரபணு என்ன என்பதை கண்டுபிடித்துவிட்டார்களா? இல்லை. எப்போது நடந்தது என உறுதியாக கண்டுபிடித்தார்களா? இல்லை. ஒரு கிமு இரண்டாயிரம் முதல் கிமு நாலாயிரத்துக்குள்ளே நடந்திருக்கலாம் என ஊடக ஆய்வாளர்கள் ஊகிக்கிறார்களாம்." இதுதான் அந்த சங்கதி.
Image may contain: outdoor and nature
உலகின் எந்தவொரு மனிதனின் மரபணுவை ஆராய்ச்சி செய்தாலும் அதில் ஏதோவொரு துண்டு (Parental DNA pattern) நம்மோடு ஒத்துப்போகும். இதை யாரும் மறுக்க முடியாது. நம்முடைய தெற்காசிய சாயல் அதில் இருக்கும். மெய்ஞானமும் சிருஷ்டி ரகசியமும் அறியாத வேற்று நாட்டவர்கள் அவர்களிடமிருந்து நாம் வந்ததாகச் சொல்வார்கள்.
தேவலோக பசு எனப்படும் கோமாதாவின் மரபணு என்னவாக இருக்கும் என்று நாம் போன டிசம்பரில் விவாதித்த மாதிரிதான் இதுவும். தெற்காசிய தென்னாட்டு பசுமாட்டின் மரபணு துண்டு எல்லா ஜெர்சி ஜிம்மி ஜிக்கி ஜாதி கலப்பினங்களிலும் ஒட்டிக் கொண்டுவரும். பல்வேறு காரணங்களினால் இந்த துண்டின் அடர்த்தி (density) குறைந்தும் மிகுந்தும் காணப்படும். இது நமக்கும் பொருந்தும்!
அந்த ஆய்வில் நகைச்சுவை என்னவென்றால், ஆரியர்கள் என்போர்கள் ஏதோ வேற்றுகிரகவாசிகள் போலவும், இன்னமும் கைபர் போலன் கணவாய் கதையை பேசிக்கொண்டு திரிகிறார்கள். முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடிதான், தென்னாடுடைய சிவனின் ராஜியத்தில் லெமுரியாவும் உள்ளது. அங்கிருந்துதான் பல கண்டங்களுக்கு குடி பெயர்ந்தார்கள். இதை விஸ்வகர்மா பரத்த்துவம் மூலம் அறியலாம். மாயன் வம்சத்து சந்ததிகள் உலகம் முழுக்க உண்டு. ஈசனின் ஆக்ஞைப்படி உதித்த தமிழ்க்கடவுள் முருகன்தான் திராவிட தமிழ்க் கடவுள். அதன்பின் வந்த ஆரிய கடவுள்கள் என்று சொல்லப்படும் இராமன் கிருஷ்ணன் பற்றி போகர் சொன்ன கருத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
No automatic alt text available.
பதினெண் தமிழ் சித்தர்களில் ஒருவரான போகர், தன்னுடைய முன்ஜென்ம விவரங்களைச் சொல்லும் போது, தானே ஆதியில் பிரம்மா, மால், முருகன், இந்திரன், ராமன், கிருஷ்ணன், நபி என்று இருந்ததாக வரிசைப்படுத்திச் சொல்லியுள்ளார். ஆக, பொதிகை, அயோத்தி, துவாரகை, மெக்கா இங்கெல்லாம் இருந்தது நம்மூர்காரர் தானே? ராமன்-கிஸ்னன் எல்லாம் ஆரியர்கள்னா, இவங்க கூற்றுப்படி, முருகன் என்ற திராவிட தமிழ்கடவுள் தான் பின்னர் ஆரிய கடவுளாக மாறினார் என்று தெரிகிறது. நம் அகத்தியரை தமிழில் நூல்கள் எழுத வைத்து, அதோடு வடமொழியிலும் எண்ணற்ற படைப்புகளை ஏன் தரவைத்தார் என்ற தேவரகசியம் அந்த ஈசனுக்கே வெளிச்சம்.
உலகின் சப்த சாகரங்களை சுற்றிப்பர்த்தும், பல கண்டங்களுக்கு போகர் தான் வடிவமைத்த விமானத்தில் பலபேரை உலக சுற்றுலா அழைத்துப் போய் இறக்கி விட்டதையும் இதற்குமுன் பல பதிவுகளில் அலசிப் பாரத்தாகிவிட்டது. ஆக, எல்லோருமே இங்கிருந்து புலம் பெயர்ந்த வம்சத்தின் பிற தேச பிரஜைகள் என்று வைத்துக் கொள்ளலாம். இதில் வந்தேறி உப்பேரி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது அல்லவா?
ஊடகங்களுக்கு பொழுது போகவும் அர்த்தமற்ற அரசியல் விவாதம் செய்யவும் பிரிவினைவாத 'அணையா' விளக்கை ஒளிவீசச் செய்யும் வீண் ஆய்வுகளே இது. ஆய்வு செய்ய அறிவியல் கண் மட்டும்போதாது அதைத்தாண்டி மெய்ஞானக் கண் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக