About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 14 ஜூன், 2017

நலம் தரும் நாட்டு சர்க்கரை

சென்ற மாதம் எங்கள் ஊருக்குப் போனபோது, அங்கே வழியில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட 'நாட்டு சர்க்கரை' பொட்டலங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். சாலையோறம் இறங்கி உள்ளே சென்றபோது, ஆண்களும் பெண்களுமாக பயிர் நிலத்தில் சுமார் 4 -5 அடி உயர கரும்பை வெட்டிக்கொண்டிருந்தனர்.
அங்கே என்ன செய்கிறார்கள் என்று கேட்டறிந்தேன். அந்த விபரங்கள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. கரும்பு கரணைகளை 3 அங்குல இடைவெளியில் நடுகிறார்கள். பஞ்சகvவியம் தெளித்து பண்பட்ட நிலத்தில் அவை வளரும்போது கோமியத்தில் ஊற வைத்த ஆடுதின்னா இலை, நாய் துளசி, சிறியாநங்கை, நொச்சி, வேம்பு போன்ற மூலிகைக் கொண்டு தயாரித்த கஷாயம் நீர் தெளிக்கிறார்கள். இதுதான் பூச்சிகொல்லி மருந்து. இந்த மூலிகை பவுடரைக்கொண்டு செய்யும் தூப குச்சிகள் கொசு விரட்டியாகப் பயன்படும் என்பதை பழைய பதிவில் சொல்லியிருப்பேன்.
முதிர்ந்த கரும்பை வெட்டி எடுத்து, ஆலையில் சாறு பிழிந்து, பெரிய கொப்பரையில் ஊற்றி கொதிக்கவைக்கிறார்கள். அதில் சுமார் 100 கிராம் சுண்ணாம்பு போடப்பட்டு அதன்பிறகு காய்ச்சும் போது வெண்டைக்காய் இலைச்சாறு எடுத்து 1 லிட்டர் ஊற்றி அழுக்கை எடுக்கிறார்கள். நன்கு கொதி நிலை வந்ததும் அதில் கொப்பரைக்கு 100மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றுகின்றனர். பிற்பாடு அது ஈரம் போய், பொடியாகும்போது அதை ஆறவைத்து தேவையான பொட்டலங்களாக கட்டுகிறார்கள். அந்த பண்ணை உரிமையாளர் திரு. ஈஸ்வரமூர்த்தி, KKN பண்ணை, காசிலிங்க கவுண்டன் புதூர், கவிந்தபாடி, ஈரோடு.
Image result for நாட்டு சர்க்கரை, KKN Farms 
இப்போது ஒரு கிலோ நாட்டு சர்க்கரை ரூ.45 - 50 க்கு விற்கிறார்கள். இரசாயன கலப்பின்றி உள்ள இந்த நாட்டு சர்க்கரை உடலுக்கு தீமை தருவதில்லை. நுகர்வோர் அங்காடி Ration கடையில் இதை விற்க வேண்டும். அபாயகர வெள்ளை சீனிதான் புழக்கத்தில் உள்ளது. விருப்பப்படுவோர் படத்திலுள்ள நம்பருக்கு தொர்பு கொளளவும்.

Image may contain: one or more people, outdoor and nature

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக