About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 14 ஜனவரி, 2021

நல்மனமும் நல்வாக்கும்!

பாரத பூமியில் இறையருள் பெற்ற சீலர்கள் அநேகர் உண்டு. அவர்கள் எல்லோர் நாவிலும் கலைவாணியின் அருள்வாக்கும் தன்வந்த்ரியின் சுகப்படுத்தும் ஆற்றலும் நிரம்ப உண்டு. இவர்கள் எல்லோரும் ஒவ்வொருவரின் வாழ்விலும் காரணமின்றி வந்து போவதில்லை. யாரிடம் போனால் தீர்வு கிடைக்கும் என்று விதிக்கப்பட்டுள்ளதோ அத்தகையவரிடம் தக்க நேரம் வரும்போது அந்த விதியாளிக்கு ஆலோசனை கிட்டும்.

அப்படிப்பட்ட ஒருவர்தான் அண்மையில் மறைந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பெரியவர், ஜோதிடர் கந்தையா பிள்ளை அவர்கள், வயது 94. இவர் காணாபத்திய வழிபாடும் உபாசனையும் செய்தவர். தொலைபேசியிலும் நேரிலும் யார் தங்கள் பிரச்சனைகளைக் கூறித் தீர்வு கேட்டாலும் அதற்கு அக்கணமே பிள்ளையாரை வணங்கிட, அவர் இவருடைய ஆக்ஞையில் வந்து உணர்த்துவதை அருள்வாக்காகச் சொன்னவர். மூன்றாவது கண் நிகழ்ச்சியிலும் அவருடைய எபிசொட் வந்தது.
என் வாசகர்கள்/ நண்பர்கள் சிலர் என்னிடம் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கேட்கும்போது ஐயாவின் நம்பரைத் தந்து அவரை அணுகிக் கேட்குமாறு பரிந்துரை செய்தேன். அவர் தனக்கு வாய்த்த சக்தி மூலம் இச்சமூகம் பயனுற ஒரு சேவையாக ஆற்றிவந்தார். இவரைக் கடந்த ஐந்தாண்டுகளாக அறிவேன்.
ஒரு சமயம் என் நண்பருக்காக அவரைத் தொடர்பு கொண்டு கேள்விகள் கேட்கலாம் என பேசும்போது, அவர் என்னைப் பற்றி விசாரித்தார். தானாகவே சில தகவல்களைச் சொன்னார். "தம்பி, 'அ' எழுத்தில் பெயர் தொடங்கும் மூத்த சித்தர் உன்னுடன் இருந்து உனக்கு வழிகாட்டி அருள்கிறார், சித்த நூல்களை எழுதுவதால் பலருடைய கண் திருஷ்டி விழும் என்றாலும் அது தானாக அகன்றிட உன் குலதெய்வம் காத்தருள்வாள்" என்று அப்போது சொன்னார்.
அவர் பேசியவை எல்லாமே இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவருடன் தொடர்பில் இருந்தது ஒரு பேறு. ஓம் சாந்தி!









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக