About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 14 ஜனவரி, 2021

இதில் என்ன வியப்பு?

‘இந்தியர்கள் 2500 வருடங்களுக்கு முன்பே கண்ணாடி பாசிமணிகளை உபயோகித்தனர்’ என்பதை இப்போது நிதானமாகச் சொல்கின்றனர். அதுபற்றிய இன்றைய செய்திப்படம் தான் இங்கே உள்ளது. அக்காலத்திலேயே கண்ணாடியை உருக்கிக் காய்ச்சி, அதில் காற்றை ஊதி மணிகளாக்கி, கயிறு கோர்த்து மாலைகளாகத் தொடுக்கும் யுக்தியை மேற்கத்தியர்களுக்கு முன்பாகவே இந்தியர்கள் அறிந்திருந்தனர் என்பதுதான் இப்பெட்டிச் செய்தி.

பழைய பதிவுகளில் போகருடைய பாடல்களைப் பார்த்து அலசிவிட்ட நமக்கு இதெல்லாம் வியப்பூட்டும் ஒரு செய்தியே அல்ல. பூநீறு கலந்த பாஷாணங்களைக் கொண்டு பளிங்கு மற்றும் பல வண்ணங்களில் குண்டு மணிகள், ரவைகள், செயற்கை ரத்தினங்கள், பீங்கான், கண்ணாடி பாத்திரங்கள் என பலவற்றையும் போகர் கண்டுபிடித்தார். இந்த நுட்பத்தை 2500 வருடங்களுக்கு முன்பே மக்கள் பயன்பாட்டுக்கும் அறிமுகம் செய்தார். அதைக்கொண்டு இன்னும் பல அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். அப்போதிலிருந்து சீனா, பாரதம், மற்றும் மேற்கத்திய நாடுகளில் இவை பிரபலமானது.
என்னதான் இலக்கிய சான்றுகளும் தொல்லியல் ஆய்வுக்கு உதவும் என்றாலும் சன்மார்க்கம் சார்ந்த சித்த இலக்கியங்கள் ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படாது. ஆனால் பளிங்கு என்ற சொல் மணிமேகலை காப்பியத்தில் உள்ளதாகப் பெட்டிச் செய்தியில் குறிப்பு வருகிறது. மகாபாரதம் காலந்தொட்டே ஸ்படிகம்/ கண்ணாடி மணிகளைப் பற்றிய குறிப்பு இலக்கியங்களில் நிறைய உள்ளன.
கலி யுகம் முதலே விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு நம் போகர் பெருமானே சூத்திரதாரி! சித்தனின் மொழிப் புலமைக்கான அளவீடுகளின் படி, தமிழில் இயற்றியது போக வடமொழியிலும் அவரே இது குறித்து வேறு பெயரில் நூலியற்றி இருந்தாலும் ஆச்சரியமில்லை.
-எஸ்.சந்திரசேகர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக