About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 14 ஜனவரி, 2021

தெய்வத்தை ஒதுக்கிப் பார்க்கணுமா?

இரு இரு... முதலில் ஆரிய கடவுள் திராவிட கடவுள் என்றாய் (எங்கள் கொள்ளுபாட்டன் தலைமுறை).. அப்புறம் சமஸ்கிருத கடவுள் தமிழ் கடவுள் என்று பிரித்தாய் (எங்கள் பாட்டன் தலைமுறை) ... அப்புறம் சிறுதெய்வம் பெருந்தெய்வம் என்று பிரித்தாய் ( எங்கள் அப்பா தலைமுறை).. அப்புறம் வடநாட்டு கடவுள் தென்னாட்டு கடவுள் என்று பிரித்தாய்.. வேத கடவுள் கிராம கடவுள் என்று பிரித்தாய்.. இப்படி எங்கள் தெய்வங்களை கூறுபோட்டு கூறுபோட்டு அவை வேறு தெய்வம் இவை வேறு தெய்வம் என்று குறுக்கிக் கொண்டே வந்தாய்.. கடைசியாக எஞ்சியது மாரியம்மன் கருப்பனார் எங்கள் குலதெய்வங்களும் முருகனும் தான்.. இவை சூத்திர தெய்வங்கள் என்று பார்ப்பனர் சாடியதாகச் சொன்னாய்.

இப்போது முருகனை ஒதுக்கு என்று கூறுகிறாய் கந்த சஷ்டி கவசத்தை விமர்சிக்கிறாய்.. குலதெய்வத்தை ஒதுக்கு மாரி முனி கருப்பனை ஒதுக்கு, என்றும், அவை பார்ப்பனர் பிடியில் உள்ளது என்றும் சில கம்யூனிஸ்ட் திராவிட விஷமிகள் பேசவும் புத்தகம் போடவும் ஆரம்பித்துவிட்டனர், இன்று அப்படிப்பட்ட ஒரு நூல் என் கைக்கு வந்தது (இது இந்த தலைமுறைக்கு).
நிற்க, வழக்கம்போல இவர்கள் வெளிநாட்டு (முதலாளிகளின்) தெய்வங்களை விமர்சிப்பது இல்லை. இவை தற்செயலாக நடப்பது போல தெரியவில்லை பல்வேறு தரப்பினர் ஆங்காங்கே பேசி வைத்துக்கொண்டு ஒருங்கே செயல்படுகிறார்கள். உஷார் மக்களே உஷார், இந்த கைக்கூலி கும்பல் எதெல்லாம் தவறு என்கிறதோ அவை எல்லாம் சரி, எவன் எல்லாம் கெட்டவன்கிறதோ அவனெல்லாம் தான் உத்தமன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக