About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 14 ஜனவரி, 2021

வா'சிவா'சி

வால்மீகர் திருவாய் மலர்ந்தருளிய நூலில் இப்பாடல் தெளிவாக உள்ளதால் பொருளை விளக்கிச்சொல்ல எதுவுமில்லை. இருந்தாலும் புதிதாய் நட்பில் வந்தவர்களின் புரிதலுக்காக மேலோட்டமாக ...

வாசி என்பது பிங்கலை (ரவிகலை), இடகலை (சசிகலை) வழியே உள்ளே வெளியே வந்துபோகும் (பூரகம்/ரேச்சகம்) மூச்சு. சித்தனானவன் இவ்வுலகமே சிவமென்று சிந்தையில் தெளிவாக இருப்பான். (அண்டத்தில் இருப்பது பிண்டத்திலும் இருக்கும் என்பதால் நம்முள் சிவன் கோயில் கொண்டுள்ளான்.) அவனுக்கு நந்தியெம்பெருமான் தூலதேகமாகவும், கண் மூக்கு வாய் செவி என்பவை நான்முகனாகவும், ஆறாதாரத்தில் விநாயகனே மூலத்திலிருந்து புறப்படும் மூச்சாகவும், சிவசக்தியே ஒளிரும் சூரிய சந்திரராகவும் உள்ளதை நீ அறிந்திட வேண்டும்.
ஆகவே நம் தேகத்தில் சிவனும் சக்தியும் நிலைத்து வாசம் செய்ய வேண்டும் என்றால் நம் உயிர் நிலைத்து இருக்க வேண்டுமென்றால் வாசியோகம் பயில வேண்டும். அதற்குத் தக்கபடி நம் மூச்சை அதிகம் செலவு செய்யாமல் நிதானமாக ஆழமாக சுவாசித்து உடலைப் பேணுவது அவசியம்.
அதுபோல் அவசியமின்றி நம் கண்களைத் திறந்து வைத்து அதுவழியே உயிரொளியை வீணாக்காமல் முடிந்தவரை கண்களை மூடி அகவொளியைக் காணவேண்டுமென சித்தர் பாடல்கள் சொல்கின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக