About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 14 ஜனவரி, 2021

அடையாளம் இழக்கும் போகர்!

சீனாவில் போகர் கூடுவிட்டுக்கூடு பாய்ந்து ஒரு முதியவர் உடலில் பிரவேசித்தார். திடீரென்று தத்துவம் பேசும் ஒரு முதியவர் வரவே அது யாரென குவாங்சு நகரத்தினர் அறியாததால் அவரை ‘மூதறிஞர்’ (Laotzu லாவோட்சு) என்று அழைத்தனர். உண்மையான பெயர் தெரியவில்லை. வேற்று தேகத்தோடு அவர் அங்கு இருந்ததை “பரங்கியர் தேசத்தில் பன்னீராயிரம் வருடங்கள் இருந்தேனே” என்று கூறியுள்ளார். தான் சீனப்பிரஜை என்றால் பரங்கியர் தேசம் என்று சொல்லியிருப்பாரா? தேகத்தால் சீனராக இருந்தாலும் உள்ளே இருப்பது நம் சிவசித்தர் தானே? ஆனால் கூடுவிட்டுக்கூடு பாய்ந்ததை அவர் எந்த நூலிலும் வெளிப்படுத்தியதில்லை.

சீன வரலாற்றுச் செய்திபடி லாவோட்சு பதிமூன்று பிறவிகள் எடுத்தார் என்றும், ஒவ்வொரு பிறவியும் சுமார் 900 முதல் 1000 வருடங்கள் வரை நீடித்ததாகச் சீன வரலாற்றுப் பக்கங்களில் படித்தேன். அப்படி என்றால் மேலே போகரின் கூற்று சரிதான்! அகத்தியர் வாக்கில் “பூமிதனில் கணநேரம் தங்கா பாலகா, பரங்கியர் தேசத்தில் (போயாங் என) பெயர்க்கொண்ட சித்து” என்று போகரைப் பாராட்டும்போது மேலேயுள்ள உண்மை வலுப்பெறுகின்றது.
தமிழிலும் சீனத்திலும் பல நெடிய நூல்களை இயற்றினார். நம் கழகத்து நூலாசிரியர்களைப் போலவே அந்த நாட்டிலும் சிலர் உள்ளனர். லாவோட்சுவின் படைப்பு எதுவும் அவருடையதே இல்லை, இங்குமங்கும் யாரோ எழுதியதை எல்லாம் கோர்வையாகச் சேகரித்துத் தொகுத்த ஒரு நூல்தான் அது என்போர் உண்டு. நம்முடைய கட்டுரையாளர்கள்/ சொற்பொழிவாளர்கள் / யூடியூப் காணொளிகள் எல்லாம் போகரைச் சீனர் எனச் சொல்லி வருவதுகூட தவறில்லை ஆனால் அவரை மயன் வம்ச விஸ்வகர்ம பொற்கொல்லர் என்று சொல்லாமல் குயவன், வண்ணான் என்று தத்தம் போக்கில் பரப்புரை செய்கின்றனர். அந்தச் சீன தேகத்து முதியவர் வேண்டுமானால் குயவராகவோ வண்ணாராகவோ வாழ்ந்திருக்கலாம்.
அவருடைய தாவோதிஜெங் என்ற சீன நூலிலுள்ள பாடல்கள் எல்லாமே தத்துவம் மதம் யோகம் சார்ந்தே உள்ளது. அதனூடே தற்காப்பு நெறிகளும் அடங்கும். பல பாடல்களில் வேதம்/உபநிடதம் கோடிட்டுக் காட்டும் துவைத்தம்/அத்வைத்தம் சான்றுகளும், கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்த கீதையும், அருணகிரி நாதருக்கு முருகன் உபதேசித்த மொழியும் சற்றும் மாறாமல் அப்படியே வந்து போகின்றன. தான் ஆதியில் முருகனாய் கிருஷ்ணனாய் வந்து போன அவதாரச் சுவடு இங்கே பாடல்களில் வெளிப்படுகிறது. ஆறாம் காண்டத்தில் போகர் தன்னுடைய குலத்தைப்பற்றிச் சொன்னாலும், யாரோ எங்கோ சொன்னதை இன்னும் நம் மக்கள் பரப்பிக்கொண்டு இருப்பார்கள்.
சிவசித்தர்களுக்குச் சாதியில்லை, அவர்கள் எல்லோரும் ஒரே குலம் ஒரே மொழி. அவர்களுடைய சாதிகளை அறிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம் என்று தூய தமிழ் நேசர்கள் வரிந்து கட்டிக்கொண்டு விமர்சிப்பார்கள். ஒவ்வொரு சித்தருடைய பிறப்பு /சாதி/ தலைமுறை / சமாதி பற்றிப் பல பாடல்களில் உரைத்த போகருக்கு நம் கலிகால மக்களின் எண்ணங்கள் பற்றி எதுவும் தெரியாது பாருங்கள்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக