About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 21 ஜூலை, 2018

நித்திரை

'வீட்டிற்குள் இடம் மாற்றி படுத்தால் தூக்கமே வராது' என்று பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு எங்கு எப்படித் தூங்கினாலும் 1 நிமிடத்தில் குறட்டை விடுவேன். தூங்குவது கிழக்கு-மேற்காக இருக்கட்டும்.
பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசிக்கும் நபர் ஏன் தன் வீட்டிற்குள்ளே இடம் மாறி படுத்தால் தூக்கம் வருவதில்லை? இதற்கு எதிர்மறை Geopathy கதிர்கள்தான் காரணம். பூமித்தட்டு அடியிலிருந்து மேற்புறம் நோக்கி அடிக்கும் தோஷ அலைகள்தான் இவை. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பாதாளத்தில் ஓடும் நீர் நிலைகள், வெற்றிடம், பள்ளம், மூடிய கிணறு, துளைக்கிணறு, புதையுண்ட கெடுவஸ்துகள், உருகிய கனிமங்களின் கதிர்கள், என்று எவ்வளவோ சொல்லலாம். இந்த தீயவீச்சை ஸ்ப்டிகம், செம்பு ஆகியவை கட்டுப்படுத்தும். சிலர் வீட்டில் எப்போதுமே ஒரு நிலப் பகுதியில் செடிகள் வளராது, மரம் பட்டுபோகும், நாய் படுத்துத்தூங்காது, அடிக்கடி மின்சார பலபு பியுஸ் போகும், உட்கார்ந்து படித்தாலும் புத்தியில் பதியாது, நோய்வாய்ப்படுவது, இப்படி பல எதிர்மறைகள் உண்டு. இதைஅங்கு தேகமே காட்டிக் கொடுக்கும். அதற்கேற்ப அவ்விடத்தை சுத்தி செய்யவேண்டும்.
நமக்கு பழக்கமில்லாத இடத்திற்கு போனால் தூக்கமே வராது என்றால் உடல்நலம் பாதிக்கும். வெளியூருக்குப் போகும்போது அங்கே லாட்ஜில் ரூம் எடுத்து தங்குகிறோம். பலதரப்பட்ட நபர்கள் தங்கிவிட்டுப் போன அறை, தூய அலைகளால் நிரப்பப் பட்டிருக்குமா என்ன? எதிர்மறை வீச்சுதான் இருக்கும். இதையெல்லாம் முறியடித்து நாம் தூங்க வேண்டும். உடல் அசிதியாக இருந்தால் எப்படியும் தூக்கம் வந்திடும். ஆனால் மற்ற நேரத்தில் இந்த பொருந்த கதிர்கள் பாதிக்குமே!
வீட்டில் நீங்கள் தூங்கப்போகும் முன் தியானம் செய்துவிட்டுப் படுங்கள். பிரணாயாமம் செய்யுங்கள். நுரையீரலின் கொள்ளளவை முறைப்படுத்துங்கள். மாலையில் முகம் கைகால் சுத்தம்செய்து நெற்றிக்கு விபூதி தரித்ததும், கழுத்தில் ஸ்படிகம்/ ருத்திராட்சம் மாலையை அணிந்து வழிபாடு செய்யுங்கள். தீட்சை பெற்ற சிலர் தலையில் ருத்திராட்சம் மாலை அணிந்து கொண்டு ஜெபம் செய்வார்கள். இது தலையின் உள்ளே ரத்த ஓட்டத்தை சீராக்கி, மன அழுத்தத்தை குறைக்கும். இயற்கையாகவே ருத்திராட்சம் மின்காந்த சக்தி பெற்றது. இது மூளைக்கு தேவைகேற்ப சக்தியைப் பாய்ச்சி அதை புதுப்பிக்கிறது. உங்களுடைய தேக ஒளிவட்டத்தில் எதிர்மறையாக எதுவும் குறுக்கிடாமல், சகஸ்ரார சக்கரம் சக்தியூட்டப் படுவதால் அதிவேகத்தில் சொப்பன நிலைக்குபோக கண்களைப் பணிக்கும்.
இதை எங்கே உட்கார்ந்து செய்யவேண்டும்? தூங்கும் இடத்தில்தான். ஒரு கட்டத்தில் மூளை அசதிபோல் காட்டும், கண்களுக்கு நித்திரையை தூண்டும். அப்படியே கால்நீட்டி படுத்துத் தூங்குங்கள். மூன்று முறையாவது நித்திரை சுழற்சி சுற்றில் புரண்டு படுப்பீர்கள். சூரிய சந்திரனை மையமாக வைத்து இயங்கும் நம் மனோ கடிகாரம் விடியும்போது எழுப்பி விடும்.
No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக