About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 9 ஜூலை, 2018

சிவ வெண்பா மாலை

Image may contain: 2 peopleவடமொழி சிவனின் ரவிகலை வாசியென
திடமொழி உரைத்த சித்தனைத்தூற்றி - உமை
முகத்துத் தீந்தமிழே வாழ்கிறதெனப் பகரும்
யுகத்தினோர் சுமப்பர் பழி

சிவனின் வாசியாம் வடமொழி இறந்ததென 
எவனின் இகழுரை நிலைக்குமோ - அஃதவன்
மறுமை சொல்லொணா தீவினைத் தரும்
வறுமை யகலாப் பிணி  
மந்திரம் வழுவாமல் குரவர்கள் பேணினர்
தந்திரம் நினைத்தனர் பகுத்தறிவாளர் - கடும்
பாபங்கள் ஈட்டத் துணிந்த நாவினால்
சாபங்க ளேற்றார்வினை
எங்கெங்கு காணினும் நிந்தனை நொந்தனை
பங்கனை நித்தம் வசைப்பாடுவார் - பித்தம்
தெளிந்தால் நற்கதி பெறுவார் பெறார்
களிப்பில் மூழ்கியோர் கதி
வேதியரே பிரம்மம் காக்கும் பிராமணரே
வேதிக்குமே ஊழ்வினை பிம்பங்கள் - இறை
கோணாது மறையைக் காத்திட்டு நின்றீறேல்
பேணாமல் போகாது நெறி
*  *   *  *  *
சமஸ்கிருதமா? தமிழா? எது மூத்தமொழி என்று இன்றுவரை முட்டி மோதிக்கொள்ளும் தமிழ் நேசர்கள் நலனுக்காக இப்பதிவு. தமிழ் சித்தர்களின் நூல்கள் பலவற்றை ஆய்வுசெய்தேன். மூத்த சித்தர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான கருத்தைத்தான் சொல்லியுள்ளனர். அதில் ஒரு சான்று:
சிவந்தானும் வடமொழியில் வாத மார்க்கம்
சிறப்பாக இருலட்சங் கிரந்தந் தன்னைக்
கவந்ததுமைந் தாம்வேத த்திற் சொன்னார்
கருணைபெற உமையவளும் தமிழாய்ச் செய்து
பவத்தானும் நந்திக்குச் சொன்ன போது
பார்த்தவரும் நந்திதன்வந் திக்குச் சொன்னார்
தவந்தானும் தன்வந்திரி அசுவ னிக்குத்
தகைபெறவே அசுவனியும் விசுவனிக்கு
சொன்னதொரு விசுவனியும் அகத்தி யர்க்குச்
...
சிவன் வடமொழியில் எல்லா சூத்திரங்களையும் உமையவளுக்குச் சொல்ல, அதை உமையாள் கருணையோடு அருந்தமிழில் நந்திக்குச் சொல்ல, நந்தி தன்வந்திரிக்கும், தன்வந்திரி அசுவனிக்கு, அசுவனி விசுவனிக்கு, விசுவனி அகத்தியர்க்கு, அகத்தியர் புலத்தியர்க்கு என இப்படியே சித்தமரபில் வைத்திய சூத்திரங்கள் வந்துள்ளது என்று இப்பாடல் சொல்கிறது. சிவனின்றி சக்தி இல்லை. இரு மொழிகளும் ஈசனின் இரு கண்கள். இப்பாடலில் வடமொழிக்கும் தமிழுக்கும் முக்கியத்துவ பேதம் உள்ளதா? சிவனுடைய வாசியின் இரு கலைகளாக உதித்த ஆதி மொழிகள்தான் இவை
தெய்வீக மொழிகளின் அடி-முடி காண தொல்லியல் துறையின் குப்பைமேட்டை கிளறக்கூடாது. சித்த ரிஷிகளும் சமயக் குரவர்களும் பல லட்ச பாடல்களில் உணர்த்தியதை நாம் ஆத்திரமின்றி அக்கறையுடன் செவிமடுத்துக் கேட்கவேண்டும். இரு மொழிகளையும் நிந்தனை செய்தால் அது ஈசனையே பழித்த பெரும்பாவம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக