About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 19 ஜூலை, 2018

நெளியும் நண்பன்!

இக்காலத்தில் அதிக செயற்கை உரம் போடுவதால் மண்ணில் இயற்கை சத்து இருப்பதில்லை. பஞ்சகவ்ய முறையை சிலர்தான் பின்பற்றி வருகிறார்கள். அதில் ஊக்கிகளாக பூவன் பழத்தையும் இளநீரையும் சேர்ப்பதற்கு ஒரு காரணம் உண்டு. வஸ்துகளை நொதிக்க வைக்கவும், அக்கரைசல் மண்ணின் அடியில் Nitrogen fixation ஏற்படுத்தக் கூடிய மண்புழுக்களை பெருக்கவும் உதவும்.
போகர் தன் பாடலில் நாக்குபூச்சியை உற்பத்தி செய்யும் எளியவழியைச் சொல்கிறார். செம்மண் பூமியில் ஒரு குழி தோண்டி அதில் ஈச்சம் பழத்தை வெல்லத்தோடு பிசைந்து வைக்கோலோடு கலந்து மண்போட்டு மூடிட வேண்டும். ஒரு இரவு முழுதும் விட்ட பின் சுமார் ஐந்து சாமம் கழித்துப்பார்த்தால் பூநாகங்கள் (மண் புழுக்கள்) அதை சூழ்ந்திருக்கும். இக்காலத்தில் செம்மண் பூமியை எங்கே தேடிச்செல்வது? வேறு வழியின்றி மக்கும் குப்பைகளை கம்போஸ்ட் உரமாக மாற்றி மண்புழு உற்பத்தி செய்கிறார்கள். மேலே சொன்ன முறையில் மறந்துபோயும் சாணம்/கோணி குழியின் அருகில் வைக்கவேண்டாம். மண்புழு போய் தேள் வந்துடும்... டும்டும்டும்.!
Image may contain: outdoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக