About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 20 ஜூலை, 2018

காகித பாத்திரம்

கிமு4 ல் போகர் சீனாவில் பெரிய ஆலையை நிறுவி காகிதம் தயாரித்தார். அந்த சூத்திரத்தை சீனர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். பிற்காலத்தில் அதை கண்டுபிடித்ததாக யார் யார் பெயரோ வெளிவந்தது.
காகித பாத்திரத்தில் நன்றாக சமைக்கலாம் என்று போகர் கூறுகிறார். Paper கோப்பை/ கிண்ணம்/சட்டி எல்லாமே இப்போது கிடைக்கிறது. காய்கறி கடையில் கிடைக்கும் பிரண்டையை வாங்கி இலையை நீக்கி தண்டை மட்டும் துண்டுகளாக நறுக்கி மிக்சியில் நீர் விட்டு அரைத்து துவையலாக செய்து கொள்ளுங்கள். இதை கொஞ்சம் கொஞ்சமாக பேப்பர் கிண்ணத்தின் உள்ளேயும் வெளியேயும் பூசி காய விடுங்கள். இதுபோல் மூன்று முறை செய்தால் மூலிகை பூச்சு சற்று தடிமனாக சொரசொரப்பாக இருக்கும். இப்போது இதில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, பலகாரங்கள்கூட பொறித்து எடுக்கலாம். பிரண்டை அரைத்து உளுந்து அப்பள மாவில் கலந்து இடுவார்கள். ஆனால் இது எதற்கு? காகித பாத்திரம் தீ பற்றாமல் இருக்கவும், உண்ணும் பலகாரங்களால் வாய்வுத் தொல்லை வராமல் இருக்கவும் போகர் வகுத்த 2-in-1 யுக்தி.
டெய்ல் பீஸ்:- ஒரு அங்குலத்திற்கு நறுக்கிய இந்த பிரண்டை துண்டுகளை நன்றாக நீரில் அலசி விட்டு, அதை வாணலியில் வெறுமனே கருப்பாக வறுத்து எடுத்தால் வருவதே 'பிரண்டை உப்பு'.. நாட்டு மருந்து கடையில் விற்கும்
Image may contain: one or more people, plant and nature

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக