About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 26 ஜூலை, 2018

நீரின்றி அமையாது...

மேட்டூர் திறந்தபின் பாய்ந்து வந்த நீர் இதுவரை எந்த அளவுக்கு உபயோகமாக இருந்தது? எத்தனை TMC பாசனத்திற்கு விடப்பட்டது, அணைக்கட்டில் மீதம் என்ன, எத்தனை TMC வீணாகக் கடலுக்குப் போனது? தெரியவில்லை! காவேரி கொள்ளிடம் மற்றும் கிளை நதிகள் எல்லாமே பெருக்கெடுத்து ஓடியதா? திருப்பிவிடப்பட்ட உபரி நீரால் பிற பகுதிகளின் ஏரிகள் கண்மாய்கள் தாங்கல் எல்லாமே நிரம்பி வருகிறதா? ஒரு வாரமாகியும் செய்தி ஏதும் இல்லையே! நதி எங்கே போகிறது?... கடலைத்தேடி.
"காவேரி உயிர்க்குதம்மா கரைப்புரண்டு ஓடுதம்மா
கொள்ளிடம் பாயுதம்மா கல்லணையும் நிரம்புதம்மா
வெள்ளப் பெருக்கெடுத்தும் ஏரிகம்மாய் நிறையலையே
திறந்துவிட்ட நீரும்தான் கரனை தாங்கல் போகலையே
சுழன்றுவந்தும் பயனில்லை ஏந்தல் குளமும் வீடாச்சே
தூரெடுத்து வெக்கலையே கடலைநோக்கி போயிடுச்சே
"
Image may contain: outdoor, nature and water

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக