About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 23 ஏப்ரல், 2018

'மறை' வேதங்கள்

'ரிக், யஜூர், சாம, அதர்வ' என்ற நான்கு வேதங்கள் பற்றி கேள்வி பட்டுள்ளோம். ஆனால் அதில் என்ன சங்கதிகள் உள்ளது என்பது நாம் பல காலமாக படிக்காமலே உள்ளோம். அதன் சாரத்தை நால்வரும், வள்ளுவரும் தங்கள் நூல்களில் தந்ததால் சற்று புரிந்தது. ஆனால் அத்தனையையும் எளிமையாக ஆழமாகப் படித்து சிந்திக்க எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். அல்லவா? அண்மையில் நான்கு வேதங்கள் பற்றி அலசிக் கொண்டிருக்கும்போது கீழ்கண்ட நூல்கள் கண்ணில்பட்டது. காலஞ்சென்ற பண்டிதர் எம்.ஆர்.ஜம்புநாதன் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு அருமை. ஒவ்வொரு வேதத்திலும் மண்டலம்-சூக்தம்-மந்திரம்-பொருள் என்று விலாவாரியாக கொடுத்துள்ளார். அடிப்படை ஆன்மிக அறிவுள்ள எவருமே எளிதாகப் படிக்கும்படி உள்ளது. அதை வெளிட்டோர்: T.N.A.Iyer, Flat No.8, Second Floor, 'Rag Mayur', 19th Road, Khar Road, Mumbai 400052.
ஐந்தாம் வேதமான 'பிரணவ' வேதத்தை காலஞ்சென்ற சில்பகுரு V.கணபதி ஸ்தபதி தமிழில் தொகுத்தார். Panchama Vedham ஐந்து வேதங்களும் விஸ்வகர்ம ஈசனின் பஞ்ச முகத்திலிருந்து வடமொழியில் வெளிப்பட்டவை. யஜூர் வேதமானது கிருஷ்ண/சுக்ல என்று இரு பிரிவுகள் கொண்டுள்ளது. கிருஷ்ண பிரிவில் விஸ்வக்ரம சூக்தம் பற்றி அதிகம் சொல்கிறது. இதன் உபவேதங்களும் அச்சில் கிடைக்கிறது.
விஸ்வகர்மரின் ஐந்து முகத்திலிருந்து படைக்கப்பட்ட எல்லா நூல்களும் இன்றுவரை அப்படியேதான் உள்ளன. இக்கால மனித தேடலுக்கு அவை கிட்டாதபோது ஆங்கிலேயரும் ஆரியர்களும் சேர்ந்து நூல்களை அழித்தனர் என்று கதை திரிப்பது வழக்கம். ஈசனைத் தவிர யாராலும் அழிக்க முடியாது. ஆனால் உண்மையில் அவை எங்குள்ளது? எங்கோ உள்ளது. எல்லோரும் புழங்கும் இடத்திலேயே இருக்கும் ஆனால் எல்லோர் கண்களுக்கும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் மற்றவர்களுக்குப் படிக்க ஆர்வமின்றி இருக்கும். ஏன்? யார் கையில் எப்போது எந்த நூல் கிடைக்கப் பெறவேண்டுமோ அப்போதுதான் அது வெளிப்படும். அதுவரை அது மறைப்பாக இருக்கும் என்பது சித்தர் வாக்கு. அப்படித்தான் ஐந்தாம் வேதமான 'பிரணவ வேதம்' நூல் அழிந்துபோனது என்று குற்றம் சாட்டப்பட்டு பின்னர் மறைப்புடன் இருந்தும், ஒருவர் அதன் ஆயரக்கணக்கான சுலோகங்களை தன் வாழ்நாள் முழுதும் மனனம் செய்தபின் அந்த மூலநூல் மீண்டும் மறைந்து போனது. இதைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
No automatic alt text available.



1 கருத்து:

  1. திரு ஜம்புநாதன் அவர்கள் வெளியிட்ட மொழி பெயர்ப்பு புத்தகம் கிடைக்குமா

    பதிலளிநீக்கு