About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 30 ஏப்ரல், 2018

என்னை பாதித்த தென்னை

பக்கத்து வீட்டில் இருக்கும் 45 வருட பழமையான தென்னை மரங்கள் எல்லாம் பூச்சி தாக்கியுள்ளதால் குருத்து விடுவதில்லை என்ற காரணத்திற்காக 45 நிமிடங்களில் வேகமாக வெட்டிக் கூறு போட்டனர். வேடிக்கைப் பார்த்த நான் தென்னையின் குரலாக மாறினேன்.
தென்னம்பிள்ளையாக இங்கே வந்தேன்
கைப்பிள்ளையாக மெல்லச் சிரித்தேன்
பெரியபிள்ளையாக நான் வளர்ந்தேன்
கணக்குப்பிள்ளையாக பணம் தந்தேன்
மூத்தபிள்ளையாக நிலைத்து நின்றேன்
நெடும்பிள்ளையாக வளைந்து ஆடினேன்
நோய்ப்பிள்ளையாக படுத்து விட்டேன்
பச்சைக்கிளி காக்கை குயில் அணிலும்
வெட்டுக்கிளி பருந்து மைனா குருவியும்
வெயில் இடிமின்னல் பேய்மழையிலும்
பனி சூறைக்காற்று உதிர் காலத்திலும்
என்னை நேசித்து இளைப்பாறி வந்தவை
இனி எங்கே போகும் எப்படி வாழும்?
So sad to see the axing and falling of mighty trees in no time.😪

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக