About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

இயற்கையின் பாடம்

சூன்யத்திலிருந்துதான் இந்த பிரபஞ்சமும் ஏனைய ஜீவராசிகளும் சிருஷ்டிக்கபட்டது என்பது உண்மை. ஆனால் சிறு பசுஞ்சாண உருண்டையை பொந்தில் வெறுமனே போட்டுவைத்தாலோ, அதன் மீது கோணி போட்டு மூடி வைத்தாலோ பத்தே நாளில் அதிலிருந்து 'மொயமொய'வென தேள் குடும்பம் வெளிவருவது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கும். சாணம் / உளுத்துப்போன கட்டை, இதிலிருந்தும் புழு நெளியும் என்பது சரி ஆனால் ஊர்வன பிரசவித்ததுபோல் எப்படி வெளிவரும்? ஈறு பேனாகி பேன் பெருமாள் ஆன கதைதான்.
எங்கள் வீட்டிற்குப் பின்னே ஒரு தரிசு நிலம் உள்ளது. அதில் போன வருடம் சொந்தக்காரர் வந்து சுத்தம் செய்துவிட்டுப் போனதோடு சரி. இப்போது அதில் என் கண்ணுக்குத் தெரிந்து தூங்குமூஞ்சி மரம், அசோகம், தூதுவளை, துளசி, காட்டாமணக்கு, வேம்பு, தேள் கொடுக்கு செடி, சீந்தில் கொடி, குப்பைமேனி, கீழாநெல்லி, அருகம்புல் மற்றும் ஏதேதோ புதர் செடிகள் உள்ளன. இதெல்லாம் வித்தில்லாமல் பதியனில்லாமல் நம் கண்முன் எப்படி முளைத்தது? காற்றில் கண்ணுக்குத்தெரியாத விதைகள் பறந்து இங்கு விழுந்து வளர்ந்ததா? இயற்கையாகவே மண்ணில் இதெல்லாம் பொதித்துப் படைக்கப்பட்டதா? சில வித்துகள் பறவைகள் மூலமும், நாம் சாப்பிட்டு எறிவது மூலமும் வளரும். மற்றவை எல்லாம் எப்படி? ஆச்சரியந்தான்!
The living entities are already injected into the material nature by god, and they develop in proper climatic condition என்பதை எப்போதுமே சூட்சுமமாய் உணர்ந்து பரவசப்படுவேன். இதெல்லாம் பரபிரம்மத்தின் எத்தனைப்பெரிய லீலைகள்! நாமும் அப்படித்தான். தொடக்கத்தில் சூட்சும ஆன்மாவாக சிருஷ்டியாகி, தக்கதொரு ஸ்தூல தேகத்தில் விழுந்து, உருவாகி, வளர்ந்து, பிறகு அதை துறந்துவிட்டு சூட்சுமமாக போவதுபோல்தான். ஆனால் எப்போதுமே நாம் எங்கோ ஏதோவொரு தேகத்தோடு இருக்கிறோம் என்பதை இதுதான் எனக்கு உணர்த்தியது. மற்ற செடிகள் ஏன் இன்னும் அங்கே முளைக்கவில்லை? அங்கே முளைப்பதற்கான அவசியம் எழவில்லை. பிறவிதோறும் நமக்கு (காரண ஊழ்வினை தேகம்) அமைய அவசியம் உள்ளது.
Image may contain: tree, plant, outdoor and nature

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக