About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 26 ஏப்ரல், 2018

காஞ்சிக் கடிகை to நாலந்தா

புராண காலங்கள்தொட்டே நம் பாரத தேசத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பல அறிவியல் உபகரணங்களும் அதீத கண்டுபிடிப்புகளும் பயன்பாட்டில் இருந்தன. எல்லாமே சித்தரிஷிகளின் எண்ணத்தில் உதித்தவையே. அதன் அடுத்த கட்டமாக கிபி.4 முதல் 14ம் நூற்றாண்டுவரை பல துறைகளில் முக்கிய முன்னேற்றங்கள் நடந்தன. இதைப்பொறுத்தே உலகின் மற்ற தேசங்களிலும் மனிதகுலம் ஆக்கபூர்வ செயல்களை செய்யத் தொடங்கியது. நம் தேசத்தில் இவையெல்லாம் ஆங்காங்கே தனி குழுவாகவும் பல்கலைக் கழகங்கள் வாயிலாகவும் உண்டானது.
தக்ஷஷீலம், நாலந்தா, காஞ்சிபுரம், வைஷாலி, போன்ற பல்கலைக் கழகங்களில் ஆயிரக்கணக்கில் பலதுறை மாணவர்கள் படித்தது தெரிகிறது. ஒவ்வொரு கலாசாலையில் என்னென்ன நூல்கள், புதிய ஆய்வுகள் செய்யப்பட்டது என்ற பட்டியலும் அவ்வப்போது பரிமாரிக் கொள்ளப்பட்டது. இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் students exchange முறை இருந்ததும் உண்டு. ஒரு ராஜ்ஜியத்தின் /தேசத்தின் முன்னேற்றமும் கல்வியறிவும் அங்குள்ள நூலகங்களின் அளவை வைத்தே கணித்திடலாம். அதனால்தான் படையெடுப்பின்போது முதல் வேலையாக நூலகத்தை/ கலாசாலையை தீயிட்டு அழிப்பது வழக்கமாக இருந்தது. கல்வி இல்லாமல், வரலாற்று சுவடுகள் ஏதும் இல்லாமல் செய்தனர்.
சில சமயங்களில் உயர்கல்விக்கு சிறப்பு ஆச்சாரியர்கள் நாலந்தா-காஞ்சி-தக்ஷஷீலம் பல்கலைக் கழகங்களில் வகுப்பெடுக்க போய்வந்ததுண்டு. கடம்ப, பல்லவ மன்னர்களும் இங்கேதான் கல்வி கற்றனர்.. மத்சயம், மலையாள தேசம், ஸ்ரீசைலம், கோல்கொண்டா, ஷிமோகா பகுதிகளிலிருந்து கிபி.2-3 நூற்றாண்டுகளில் நிறைய பேர் கல்விகற்றனர். தாய்லாந்து, பாலி, கம்போஜியம், சீனா, சுமத்திரை, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து இங்கே காஞ்சியில் படிக்க மாணவர்கள் சேர்க்கை நடந்தது என்று சீன பயணியும், மதகுருவும், கல்வியாளரும், பன்மொழியாளருமான யுவான் சுவாங் தன் டைரியில் குறிப்பிட்டுள்ளார். தமிழும் சமஸ்கிருதமும் பல்லவ ஆட்சியில் கட்டாய போதனா மொழியாக இருந்ததாம். மாதவியின் மகள் மணிமேகலை காஞ்சி நகரத்துக்குவந்து புத்தபீடிகை அமைத்து, அமுதசுரபியைக் கொண்டு எல்லார்க்கும் பசியைப் போக்கினாளாம். அடேங்கப்பா!
போர் என்றாலே ஒற்றர்கள் மூலம் செய்தியறிந்து முடிந்தவரை ஏடுகளை/புத்தகங்களை, அரசு கஜானாவை மூட்டைக்கட்டி அப்புறப்படுத்தி யானை ஒட்டகம் மீது வைத்து ரிஷிகளின் அத்வானக் காட்டிலோ, மலை குகைகளிலோ, சுரங்கத்திலோ சேர்ப்பித்தனர். இதில் அழிந்துபோனதும் பலவுண்டு. இதையெல்லாம் தாண்டி இன்றளவும் சில ஓலைகள் நகல் எடுக்கும் அளவில் சுமாராக இருப்பதும் இறை செயல்தான். காலப்போக்கில் வேண்டாத நூல்களை அவனே அப்புறப்படுத்தி விடுவான். அதற்கு எதிராளிகள் ஒரு கருவி. தில்லையில் பூட்டிக்கிடந்த ஓர் அறையில் வேண்டாதவை செல்லரித்ததுபோக, எஞ்சிய ஒலைகளே நம்பியாண்டார் தொகுக்க உகந்தது என்பதை ஈசனே உணர்த்தியது போல்தான் எங்கும் நடக்கும். அந்த காலக்கட்டம்தான் தென்னாட்டில் பக்தி இலக்கியங்களுக்கும், அறிவியல் தொழில் நுட்பங்களுக்கும் பொற்காலமாகத் திகழ்ந்தது
Image may contain: outdoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக