About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

விஞ்ஞானமும் மெய்ஞானமும்

விஞ்ஞானம்-மெய்ஞானம் பிணைந்தே இருப்பது. ஒன்றை செயல்பூர்வமாகக் காணலாம், இன்னொன்றை உணரலாம். பிரத்தியேகமாக ஒரு சூட்சுமத்தை அறியவேண்டும் என்றால் மனதில் அதன் நுணுக்க கட்டமைப்பு முதற்கொண்டு செயல்படும் விதத்தையும் விஷுவலாகக் காணவேண்டும். இது கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே எனக்கு வந்துவிட்டது.
இயற்பியலில் இளங்கலை படிப்பு இதற்கு வித்திட்டது என்றால், முதுகலை பட்டப்படிப்பு அதை செம்மைப் படுத்தியது என்பேன். முக்கியமாக Atomic Physics, Solid State Physics, Quantum Mechanics, Crystallography போன்ற பாடங்கள் தத்துவக் கூறுகளை கண்முன்னே கொண்டுவந்து நம்மை தத்துவவியலாளராகவும் விஞ்ஞானியாகவும் மாற்றவல்ல ஆற்றல்பெற்றது. சரி, இந்த பாடங்கள் படித்த எத்தனையோ லட்சக் கணக்கானவர்கள் இப்படி ஆகிவிட்டனரா? இல்லை. ஏன்? அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட மெய்ஞானவியல் அறிவும், ஆன்ம தத்துவமும் வெளிப்படவேண்டிய விதி இருப்பின் இவை எல்லாமே கைகொடுக்கிறது என்பதையும் கண்டேன். நுட்பமாக ஆய்வுக் கோணத்தில் பல தலைப்புகளை ஆராய இது எனக்கு அடித்தளமாக இருந்தது. அந்த கட்டமைப்பின் உள்ளேயே இருந்து செயல்பாட்டைக் காணும் அனுபவமும் வந்துவிடுகிறது. சூட்சும தத்துவம் விளங்கிவிடுகிறது.
உணர்ந்துவிடுவதால் ஒருவன் மெய்ஞானி ஆகிவிடுவானா? அதை இறைவன்தான் தீர்மானிக்கிறான். என்னதான் உரமிட்டு நீர் தெளித்தாலும், மண்ணில் வீரியமான எல்லா விதைகளுமா முளை விடுகிறது? அதையும் அவன்தான் தீர்மானிக்கிறான். புரிதல் சுலபமாகும்போது மற்ற பட்டப்படிப்பு பிரிவுகளின் தலைப்புகளும் எளிமையாகிறது. ஆய்வு செய்யும்போது எதுவுமே கடினம் என்று தெரிவதில்லை. என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொருவரும் மெய்ஞான தத்துவத்தை உணர வேண்டுமென்றால் அறிவியலாளராக இருப்பது அவசியம். சூட்சும தத்துவங்களை அறிந்த பிறகு நீங்களே MPhil / PhD வாங்கும் அளவிற்கு செம்மைப்படுவீர்கள். அதற்காக நான் எல்லாம் கரைத்து குடித்து விட்டேன் என்று கொள்ளவேண்டாம். ஓரு விஷயம் எனக்கு விளங்கவேண்டும் என்றால் அவன் ஆணைப்படி சித்த மகான்கள் வந்து தெளிவு படுத்துவதும் நடக்கும்.
இதை நான் சொன்னால் 'பொய்யனே நீ அழிவாய்'' என்பார்கள். நான் சொல்வது உண்மையா என்பதை ஈசனிடம்தான் அவர்கள் கேட்டுத் தெளிவுபெற வேண்டும். காழ்ப்புணர்ச்சியில் இவர்கள் தரம் தாழ்ந்து என்னை நிந்திப்பதை அனுமதிக்க மாட்டேன்.. நந்தியம்பெருமான் முன்மொழிய கோபமானது சாபமாக என் வாயில் வெளிப்படுகிறது. எல்லாம் அவன் சித்தம்!
மெய்ஞானி ஆவதும், அஞ்ஞானி ஆவதும் ஈசனின் கையில்தான் உள்ளது! இதற்காக நான் மற்றவரைப்பார்த்து பொறாமை படுவதோ, அவர்கள் என்னைப்பார்த்து வயிறு எரிவதோ, தம்படி பிரயோஜனம் இல்லை. ஒருவனுக்கு ஞானம் எந்த அளவில் இருந்தால் போதும் என்பதை அவனே முடிவு செய்கிறான். இதை மற்றவரோடு ஒப்பிட்டுக்கொண்டிருந்தால் அஞ்ஞானியாக இருப்பதே சாலச் சிறந்தது. Ignorance is bliss! 

Image may contain: one or more people, ocean and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக