About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

எழுத்தும் வாசிப்பும்

ஒரு சமயம் பிரபல எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுடன் பேசும்போது, "நீங்கள் விகடனில் தொடர்கள் எழுதியது எனக்கு நினைவுள்ளது. ஏறக்குறைய 50 புத்தகங்களுக்குமேல் எழுதியிருந்தாலும், 90களின் பிற்பகுதியில்தான் உங்கள் பெயர் பிரபலமானது. எதனால் இப்படி?" என்று கேட்டேன்.
அதற்கு அவர் "டிவி சீரியல் வந்தபிறகுதான் நான் வெளியுலகிற்கு அதிக அளவில் பிரபலமானேன். 80-90களில் எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணிடலாம். இன்றைக்கு அவர்களுக்கு வயதாகி விட்டது. பலர் எழுதுவதையே நிறுத்திவிட்டனர். அதை இன்று ஒப்பிடும்போது பல புதிய எழுத்தாளர்கள் களமிறங்கி விட்டனர். ஆனால் வாசகர்களைவிட எழுத்தாளர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. நல்ல எழுத்தாளர்களின் படைப்புகள் வருவது மகிழ்ச்சியே.. அதேசமயம் வாசிப்பு முன்புபோல் இல்லாமல் குறைந்து போனது வேதனையே. மின்னூல், வலைதள நூல் என்று போவதால் பாரம்பரிய புத்தக வாசிப்பு என்பதை பலரால் உணர்வு பூர்வமாக அனுபவிக்க முடியாமல் போகிறது" என்றார்.
"ஆமாம் சார். ஒவ்வொரு முறையும் புத்தக் காட்சியில் இடம்பெறும் பதிப்பாளர் அரங்குகளின் எண்ணிக்கை அதிகமாவது இதற்குச் சான்று.. டிஜிட்டல் மின்னூல் வந்ததால் சில சமயம் நல்ல புத்தகம்கூட சோபிக்காமல் போவதுண்டு" என்றேன்.
"ஆமாம். சாதகம்-பாதகம் இரண்டும் உள்ளது" என்றார்.
No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக