About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

எது வேண்டும்?

நாம் பேசும்போது இறைவன்/கடவுள்/தெய்வம் என்பதை சொல்லி வருகிறோம். மேலோட்டமாக இவை அனைத்தையுமே வேறுபாடின்றி ஒரேமாதிரி பொருளில்தான் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் இவை வேறுபடும். எப்படி?
இறைவன் - சுயம்புவான பேராற்றல் படைத்த உருவமற்ற பிரபஞ்ச சக்தி (பரம்பொருள்)
கடவுள் - புருஷா/பிரக்ருதி வெளிப்பாடுகளாகத் தோன்றி அன்பு, கருணை, தர்மம் என்பதன் வடிவாக திகழும் மறைபொருள் நிலை. உணர்ந்தவர்களுக்கு உணர்ந்த வடிவத்தில் காட்சி கொடுப்பது.
தெய்வம் - கடவுளின் உருவம் என்று நம்மால் ஏற்றுக்கொள்ளப்படும் ஒர் ஆத்மா. (தாய்/தந்தை, உயிர் காத்தவர், மூதாதையர், மகான்கள்,.. என்று பலரைச் சொல்லலாம்
இது எதுவாக இருந்தாலும், நம் இலக்கு என்ன? தெய்வ சக்தியின் வழிகாட்டுதலுடன் கடவுளை உணர்ந்து அந்த இறைவனோடு கலப்பதுதான். அது சூறாவளியா, சுழன்றடிக்கும் சூறாவளியா, புயலா, பலத்த காற்றா, தென்றலா என்று 'வாயு' சக்தியின் நிலைகளை நாம் குழம்பியபடி ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை. மொத்தத்தில் இவற்றை உணர்கிறோம். அவ்வளவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக