About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 25 ஏப்ரல், 2018

தமிழா இருந்தா ஏத்துப்போம்!

தமிழ் சித்தர்கள் மிகப்பெரிய அளவில் அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் செய்து மனிதகுலத்திற்கு பங்களித்ததால், அவர்களை எல்லோரும் 'தமிழன்டா சித்தன்டா' என்று சொல்லி மகிழ்கிறார்கள்.
அதுவே ஒரு இராமன் தன் வானர சேனையோடு இராமேஸ்வரம் முதல் இலங்கைவரை கற்பாலம் அமைத்தான் எனும்போது 'அஹ்.. அது கப்சா... இராமன் என்ற ஓர் ஆரிய என்ஜினியர் ஒரு பாலம் கட்டினானாம், அது இன்னிக்கும் அடில அப்படியே நிக்கிதாம்... அப்போ நம்மூர்ல பிரிட்ஜ் கட்ட அவனையே கூப்பிடலாமே' என்ற ரீதியில் பேசும் தமிழர்களைப் பார்த்தால் இப்படி அடிமட்ட மக்காக இருக்கிறார்களே என்று தோன்றும்.
சாமவேதம் இசைக்கும் ஆரியன் என்ற வடமொழியன் ஈசன் தன் முகத்திலிருந்து உருவாக்கிய கடவுளர்களில் விஷ்ணுவும் ஒன்று. திருமாலின் அவதாரமான தமிழ் சித்தன் போகர் எண்ணிலடங்கா கருவிகளைப் படைத்தார். பாரச்சூட், ஹாட் ஏர் பலூன், நீராவிக் கப்பல், விமானம், காகிதம், காகித உற்பத்தி ஆலை, தானியங்கி அச்சு எந்திரம், கிளாஸ், ஸ்கியுபா, டேலஸ்கோப், பீங்கான், மின்- காந்தவியல் /மின்சார உற்பத்தி கலன்கள், நவபாஷாண மருந்து, சிந்தாமணி ரடார், எலெக்ட்ரோ பளேடிங் தங்கமுலாம் பூச்சு, ரசவாத தைலங்கள், முப்பு குரு மருந்துகள், மூலிகை குளிகைகள், சோப், ரசாயன சுத்தி முறைகள், செயற்கை வைரங்கள், ஸ்கேனர், டை-எலெக்ட்ரிக் செயல்பாடுகள், இயற்பியல் செயல்வடிவங்கள், மாயாஜால வினோதங்கள் என்று எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். இதை சீன ஜனங்களுக்கும் சொல்லிக்கொடுத்து பிரபலப் படுத்தினார். அகத்தியர் மெச்சிய சித்தனானார்!
போகரே இராமனாய் இருந்து செய்த அஷ்ட சித்திகளையும், கிருஷ்ணனாய் இருந்து செய்த பல ஜாலங்களையும், அணுப்பிளவு அஸ்திர சோதனைகளையும், இங்கே வடமொழியைத் தூற்றும் நம் தமிழர்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் 'தமிழ் மரபு' சித்தர் என்றதும் கண்ணை மூடிக்கொண்டு போற்றுகிறார்கள். கடவுளாய் சித்தனாய் இருந்தாலும் அறிவியல் தொழில்நுட்ப ரகசியங்களை எங்கும் வெளிக்காட்டாமல் அவரால் இருக்க முடியவில்லை என்பது சத்தியம். அவரே சிவபாலன் முருகனாய் ஆதிகுடி நிலத்தவனாக வந்ததால் இங்கே சிவனைவிட ஒருபடி ஒஸ்தியாக மரியாதை பெற்றுள்ளார். 'அகத்தியர் சௌமிய சாகரம்', 'சுப்பிரமணியர் ஞானம்' ஆகிய நூல்களைப் படித்தால் விளங்கும். முன்னது ஈசன் இயற்றி அகத்தியர்க்குத் தந்தது, பின்னது முருகனே இயற்றி அகத்தியர்க்கு உபதேசித்தது.. தமிழ் மாயையில் குழம்பிப்போய் எதையும் புரிந்துகொள்ள முடியாதோரை என்னவென்று சொல்வது?
தோடா... ஒரே ஆளு ஆரியனா தமிழனா டபிளாக்டு குடுத்துகிறாரு. சூபரு பா!
Image may contain: one or more people and night

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக