About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 25 ஏப்ரல், 2018

சாம கானம்

சாம வேதமான இசை வேதம்தான் நம் ஆதாரப் பண். பிற்பாடு அதில் சுவர மாற்றங்கள் காலப்போக்கில் வந்தது என்பதும் அறிகிறோம்.
திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சிவனை இப்படிப் போற்றுகிறார்.
'சங்கரனைச் சந்தோக சாம மோதும் வாயானை
சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்
ஊடலை ஒழிக்க வேண்டிப் பாடினார் சாம வேதம்
சாமுண்டி சாம வேதங் கூத்தொடும் பாட வைத்தார்
சாமத்து வேத மாகி நின்றதோர் சயம்பு தன்னை'
சாமத்தை சந்தத்தோடு பாடி சிவனை (சாம வேதம் பாடுவோனை) துதிக்கவேண்டும் என்கிறார். நாம் இற்றைக்கு சொல்வதுபோல் 'தமிழ் மறை' என்று அவர் பாடலில் ஏதும் குறிப்பிடவில்லை. அதுபோல் 'மறை' என்றால் குரான், 'வேதம்' என்றால் பைபிள் என்று பல காலமாக சொல்லிவருகின்றனர். அப்படியெனில் தொழுகையில்/தோத்திரத்தில் சாம கானம் உண்டு என்று பொருள்படுகிறது. பௌத்த மதத்திலும் திரிபிடகம் சந்தத்தோடு பாடப்படுகிறது. நம் சாமவேதம் எப்படிப் பாடி இசைக்கபடுகிறது என்பதை இங்கே கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=DX11bBpuKlU
இதெல்லாம் வெட்டவெளிச்சமாக உள்ளதால், இது எப்படி மறைக்கப்படும் 'மறை' ஆகும்? எது மறைக்கப்பட்டது? எதுவிமில்லை? பரப்பிரம்மம் பற்றி அறிய விரும்பாத ஏனையோர்க்கு இவை புலப்படத் தேவையில்லை என்று இருந்தபடியால் அதை 'மறை' என்று சொன்னார்கள். இன்று எல்லா மறைகளும் அச்சு நூலாக மின்னூலாக திறந்துதான் கிடக்கிறது. ஆங்கங்கே வகுப்புகள் நடக்கிறது. இன்று இதைக் கற்க எந்தத் தடையுமில்லை.
வேள்விகள் வளர்ப்போர், அர்ச்சனை செய்வோர்; மாந்த்ரீகம், எட்சிணி, செய்வோர்; விஞ்ஞான பூர்வ தொழில்கள் செய்வோர்; மருத்துவம் யோகம்; இசை நாட்டியம் பயில்வோர் என்று ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்ற நூல்களான இவற்றை அன்றாடம் படித்து அறிய ஆர்வம் இருக்கா? அது இருந்தாலும் கண்களுக்கு மறைவாகவே உள்ளது.
என் கொள்ளு தாத்தா காலத்தில் எங்கள் ஊரில் ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் அதர்வ வேதம் படித்தபின் சாமக்கோடாங்கியாகி அதிகாலையில் வீடுகளுக்கு வருவாராம். யார் எப்போது எந்த வேதம் படிக்கவேண்டும் என்பது அவன்தான் தீர்மானிக்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக