About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

கட்டுகோப்பான நம் சாதிகள்

ஆன்மிகம் என்று எடுத்துக்கொண்டால் அது சமயத்தைக் குறிக்கும். அது பக்தியை வளர்க்கும். அது கணபதி, முருகன், சிவன், சக்தி, திருமால், சூரியன் என்று ஷண்மதம் பின்பற்ற வழிவகுக்கும்.

சமயம் என்பது சாதிகளுக்கு வழிவகுக்கும். நம்முடைய கட்டமைப்பில் அனைவருமே பங்கேற்கும் உரிமை உள்ளது. காலங்காலமாக யாரும் இன்னொருவர் ஜீவனத்தொழிலில் நுழைவதில்லை. சமயம் உண்டாக்கும் தொழில்கள் என்ன? அடிப்படையில் ஐந்து தொழில்கள். மர தச்சர், கொல்லர், கன்னார், கல் சிற்பி, தட்டார். இவர்கள் படைப்பாளிகள். இதன் அடுத்த நிலையில் சமயம் சார்ந்த மற்ற சாதிகள் வருகிறது.

கோயிலைச் சார்ந்து பூசாரி, பாணர், மேளக்காரர், பர்சாரகர், போன்றோரும், பின்னணிப் பணிகளான கணக்கு பார்க்க, தீவட்டி பிடிக்க, குங்கிலியம் போட, கோசாலை காக்க, பால்கறக்க, நந்தவனம் பராமரிக்க, தினசரி பூமாலைகள் கட்ட, விளக்கிட, மண்பாண்டங்கள் செய்ய, தேவவஸ்திரம் நூற்க, நடனம் ஆட, பல்லக்கு தூக்க, இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம். பொது வாழ்விற்கு வைத்தியர், விவசாயி, ஆசிரியர், வணிகர், வண்ணார், நாவிதர், என்று பலபேர் இருந்தனர். வாழ்வாதாரத்திற்கு ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்ந்தனர். இவற்றைப்பற்றி பெரியாழ்வார் வைணவப் பிரபதங்களில் அருமையாகப் பாடியிருப்பார். அவரவர் தங்கள் சாதிப்பெயரை சொல்லிக் கொள்வதில் ஒரு வெட்கமும் இல்லை. எல்லோருமே பெருமைக்குரிய வகையில் பங்களித்து வருகின்றனர்.

அப்போதெல்லாம் இல்லாத சாதிச் சண்டைகள் ஆங்கிலேயர் வந்ததுமே வந்துவிட்டதுதான் கொடுமை. இதுதான் பிரிவினைக்கு சாக்கு என்று திராவிடத்தில் சந்தடி சாக்கில் முற்போக்கு நாத்திக இயக்கம் திண்ணையில் இடம் பிடித்துக்கொண்டது. இன்று வீட்டிற்குள்ளேயே நுழைந்து படுத்துக்கொண்டது, சமையற்கட்டில் தீயை ஊதியூதி எழுப்புகிறது. இதெல்லாம்தான் கலியுகம் சீர்கெடும்போக்கு.

அன்றைய சாதிவாரியான பலதொழில்கள் இன்று பிரத்தேயக தொழிற்கல்வி சான்றிதழ் படிப்பாக வந்துவிட்டது. சாதி கூடாது என்று என்னதான் எதிர்ப்புகள் வந்தாலும், உலகில் பாரதத்தைப்போல் கட்டுக்கோப்புடன் எந்த சமூகமும் இயங்குவதில்லை. சமயத்தை தகர்த்துவிட்டால் அதைச் சார்ந்த சமூகங்கள் மெள்ள காணாது போய்விடும் என்ற நோக்கில் புரட்சியாளர்கள் செயல்பட்டனர்.
Image may contain: text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக