About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

திக்கு தெரியாத நாட்டில்...

இத்தனை ஆண்டுகளில் பல தமிழறிஞர்கள் வந்து போயினர். இங்கே தமிழ் வளர்ந்திருக்க வேண்டுமே, அது வளர்ந்ததா தேய்ந்ததா? நால்வர் பேணி வளர்த்த பக்தி மண்ணில் எல்லோரும் இறைவனை ஏற்றார்களா?
ஒருபக்கம் எல்லோரும் போடும் 'தமிழ் வாழ்க' கோஷத்தைப் பார்த்தால் வளர்ந்துள்ளது. ஆனால் அதோடு வெறுப்பும் வளர்ந்துள்ளது. ஏன் அப்படி? திராவிட கட்சியினரால் அன்றைக்கு பல ஆவணங்கள் திருத்தம் செய்யப்பட்டதால், அதன் உண்மை வடிவம் என்னவென்பதையே நாம் அறியாத காலத்தில் உள்ளோம். மொழி நிந்தனை, அண்டை மாநிலத்தோடு சமரசமின்மை, திராவிடம் என்ற ஏகபோக உரிமை, வடக்கு-தெற்கு பிரிவினை, என்று எல்லா பக்கமும் திகிலோடு வாழ்ந்து வருகிறோம். இது இப்படியே நீடித்தால் நமக்கு பெரும் ஆபத்துதான்.
இத்தனை ஆண்டுகளாக இங்கே நடந்து வரும் அம்ர்க்களத்தைப் பார்க்கும் நடுவண் அரசுகள், 'தமிழத்தை யார் நாசம் செய்தாலும் அவர்களால் கேள்வி கேட்க முடியாது என்ற நிலைதான் உள்ளது' என்ற அசாத்திய நம்பிக்கையப் பெற்றுள்ளது. இனி, மீத்தேன் எடுக்கிறேன், மலைத்தேன் பிடிக்கிறேன், நியூட்ரினோ சோதிக்கிறேன், நடராஜனோ பூசிக்கிறேன் என்று யார் வந்து என்ன செய்தாலும் மக்கள் நிம்மதி இழந்து காலநேரத்தை வீணடித்து தெருவில் போராட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இங்கே மன்னனும் கெட்டு மக்களும் கெட்டு சமுதாயம் முச்சூடும் கெட்டுப்போயுள்ளது. ஐம்பூதத்தையும் விற்றுப் பிழைக்கும் கஷ்ட ஜீவனத்தில் இன்று அரசியலாளர்கள் உள்ளனர்.
இறைவன் தன் ஐந்தொழிலை செய்யத் தவறினால் பிரபஞ்சம் என்னாகும்? தமிழ்நாடு (எ) திராவிடத்தில் இறையாண்மை ஐம்பது ஆண்டுகளில் தன் கடமையைச் செய்யவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கல்வியில் சிந்தனையில் பக்தியில் செயலில் நஞ்சூட்டி வந்த வினையால் தர்மநெறி தவறி இன்று எதிர்ப்பு சக்தியின்றி உள்ளோம். திராவிட அரசியல் நோக்கிலேயே நாம் வளர்ந்துவிட்டோம் என்பதால் நம் சிந்தனைகளும் மாறிப்போனது. Vox populi என்னும் பிரஜைகளின் குரல் மன்னனையே அச்சப்படுத்த வேண்டும். ஆனால் இங்கே அதற்கு எந்தவொரு மதிப்பும் இல்லாமல் போனது.
சிவன்-ஆரியன், முருகன்-திராவிடன்; உலகம் என்றால் தமிழ்நாடு, மொழி என்றால் அது தமிழ் மட்டுமே என்ற நிலைப்பாடோடு வளர்ந்து வரும் சமுதாயத்தின் எதிர்காலம் ... ஈசன் விட்ட வழி!
என் பள்ளியில் ஒரு சர்தார்ஜி ஆசிரியர் இருந்தார். அங்கேயே ஆசிரியர் விடுதியில் தங்கி இருந்தார். படு ஆச்சாரமானவர். பள்ளியில் குருத்வாரா சாஹிப் கோயிலுக்குச் சென்று தினம் காலையில் வழிபடுவார். அவருக்கு நாத்திக பகுத்தறிவு/ திராவிடம் பற்றி சற்றும் புரிந்ததில்லை. "சாமி இல்லேவா... அதூ எப்டியா இருக்கும்.. நான் டெய்லி குர்பானி சொல்றேன்னே. நானும் தமிள் பேசறேன்.. அப்பு நானும் திராவிட் தானே? என்று அப்பாவியாகச் சொல்வார். அதற்கு இன்னொரு ஆசிரியர், 'No, Mr.Singh. Here all concepts are different and funny. We have to accept what they preach' என்றதும் அவர் முழித்தார்.
Image may contain: text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக