About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 30 ஏப்ரல், 2018

மதுரையில் திருக்கல்யாணம்


Image result for மீனாட்சி திருக்கல்யாணம்

சொக்கநாதர் கைபிடிக்க மீனாளும் வாராளே 
சங்கம்தந்த மண்ணுல வாக்கப்பட வாராளே
வைகை நதியோரமாக கள்ளழகர் வாராரே 
வாக்குத்தந்தபடியே தாரைவாத்து தந்தாரே
பரிமேல வந்தாரே அழகர் பைய வந்தாரே
பரமனை ஏற்றுக்கொள்ள பெருமாளும் வந்தாரே
பாரோர் புகழவே மீனா கல்யாணம் நடந்ததே
காஞ்சனை பெத்தமக உலகாளப் போறாளே
ஏழுகடல் கொண்டார புருசனைக் கேட்டாளே
மாமியார் மெச்சும்வண்ணம் சப்தநதி தந்தாரே
மலையனும் கைகூப்பி மருமவனை தொழுதானே
கயிலாய மருமவனும் சொல்படியே செய்தானே
விண்ணதிர வான்புகழ வைபோகம் நடந்ததே
விருந்துண்டு வந்தேனே களிப்போடு வந்தேனே!
அடடே! என்ன விருந்து என்ன விருந்து! தடபுடல்தான் போங்கள்.. அங்கே பார்த்து பார்த்து பரிமாறினார்கள்.. பூத கணங்கள் பம்பரமாய் வேலை செய்தார்கள்... பார் சிறுத்ததோ மதுரை பெருத்ததோ என்று ஆகிவிட்டது... சித்திரை தேரோடும் வீதியெல்லாம் திருவிழாக்கோலம்தான்...  எப்படியோ இனிதே வந்து சேர்ந்தேன்! மாலையில் மாப்பிள்ளை சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும் புதுப்பெண் மீனாட்சி புஷ்ப பல்லக்கிலும் 'ரிசெப்ஷன்' தர வீதி உலா வருவாங்க. நானும் போவேன்! 🙏🙏😆 சித்திரை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக