About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 25 ஏப்ரல், 2018

சரித்திர குளறுபடி

திருமாலின் அம்சமும் போகரின் அவதாரமுமான ஸ்ரீமத்விராட் போதுலூரி வீரப்பிரம்மேந்திர சுவாமியின் ஆராதனை விழா இன்று முதல் நான்கு தினங்கள் அவரது கந்திமல்லையப்பள்ளி (கடப்பா) ஜீவ சமாதியில் நடைபெறுகிறது. April 25 - 28.
அவர் வாழ்ந்த காலம் கிபி.1608-1693 (17ம் நூற்றாண்டு ) என்று இணையத்திலும் சில தெலுங்கு புத்தகங்களிலும் போட்டுள்ளனர். அவருடைய பாடல் கிரந்தங்களை துல்லியமாகப் படித்தால் சொல்லப்பட்ட ஆண்டுக் கணக்கு தவறு என்பது புரியும். அவர் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது என் கருத்து. என் கூற்றுப்படி அவர் கிபி.817 பிறந்து கிபி.992 சமாதிக்குப் போனார். சமாதியின்போது வயது 175 என்று சொல்லியுள்ளார். அவர் இன்னும் உயிருடன் உள்ளே தபஸ் செய்து கொண்டிருக்கிறார்.
அவர் சமாதியான ஒரு வருடத்திற்குள் அவருடைய இளைய மகன் போட்லூரையா, தன் தந்தை உயிருடன் இருப்பாரா என்ற சந்தேகத்தில் சமாதி கல்லை இடித்துப்பார்க்க, அப்போது கோபம் பொங்கும் கண்களுடன் 'ஏனடா திறந்தாய் மூடனே, சமாதியை மூடு... நான் என்றும் இறப்பதில்லை' என்று தன் பிள்ளையை கோபத்தோடு பார்த்து உறுமினார். அவர் திறந்ததற்கு சாபமும் கொடுத்தார்.
அவர் தன்னுடைய காலக்ஞான நூலில் தான் வாழ்ந்த காலம்பற்றி பல ஆதாரங்களைக் கொடுத்துள்ளார்.
1. நான் சமாதிக்குப் போனதும் 16 வருட சுற்றுகள் (960 வருடங்கள்) முடிந்தபின்னர் வரும் விஷ்வாவசு ஆண்டில் மீண்டும் பிறப்பேன்.
2. நான் வரும் காலத்தில் கந்திமல்லையப்பள்ளி பெரிய ஊராக ஏற்றம் பெற்றிருக்கும். அங்கு பூலோக கைலாசம்போல் பஞ்சபிரம்மத்திற்கு ஒரு 'நவரத்ன மண்டபம்' எழுப்பபட்டிருக்கும். (இது 2004ல் தான் கட்டப்பட்டது.)
3. சோழர்களின் ஆட்சி விரைவில் வீழ்ச்சி அடையும். (கிபி.1279ல் மூன்றாம் ராஜேந்திர சோழனுடன் சாம்ராஜ்ஜியம் முடிந்தது. இந்த விஷயத்தை 4 நூற்றாண்டுகள் கழித்து சொல்வதில் என்ன பயன்?)
4.வைணவ குலத்தில் ஸ்ரீ ராமானுஜர் என்ற பெருந்தகை வருவார். (கிபி.1017 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார்.)
5.எதிர்காலத்தில் பரங்கியர்கள் நம் தேசத்தை ஆட்சி செய்வார்கள். (ஒருவேளை 17ம் நூற்றாண்டு கணக்குப்படி பார்த்தால், அவர் இதைச் சொன்னபோது ஆங்கிலேய East India Company காலூன்றி 90 ஆண்டுகள் ஆயிற்று. நாட்டு நடப்பு சங்கதியை தீர்க்க தரிசனம் என்று சொன்னால் ஜனங்கள் ஏற்பார்களோ?)
6. வீரபோக வசந்தராயராக தான் சக்தி பெற்று வரும் காலத்தில் பிரளயம் உண்டாகும் (2004 சுனாமி), இந்திர கீலாத்ரியில் கிபி.2011ல் பக்தர்களுக்கு தரிசனம் தருவேன் (இதன்படி பார்த்தால் 17ம் நூற்றாண்டு கதை சரிபடாது. அவர் பதினாறு சுற்று (960 வருடங்கள்) முடிந்து இன்னும் பிறந்திருக்க வாய்ப்பே இல்லையே! அப்போது இந்த நிகழ்வுகள் எப்படி முடியும்?)
7. நான் வரும்போது ஏழு கிராமங்கள் பிரிந்துபோய் தனிமாநிலமாகி இருக்கும். (அண்மையில் தெலங்கான மாநிலம் அப்படித்தான் உருவானது.)
ஸ்ரீ வீரப்பிரம்மத்தின் காலம் 17ம் நூற்றாண்டு என்றால் ஸ்ரீ ராகவேந்திரர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர், போதேந்திரர், மற்றும் பலர் இவருக்கு சற்று முன்பின்னோ சமகாலத்திலோ இருந்தவர்கள் ஆவார்கள். முதலாம் சரபோஜி மன்னரின் காலத்தில் வாழ்ந்த இவர்கள் யாருமே அப்படியொரு மகானைப் பற்றி ஏன் எங்குமே குறிப்பிடவில்லை? என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
கலி 4094 + (16*60) வருடங்கள் = கலியாண்டு 5054. இது 1965-66 வருடத்தைக் குறிக்கிறது.
ஆகவே, அவர் பாடல் வசனத்தை ஆய்ந்து பார்த்தவரை, கலியாண்டு 4094, வைசாக மாதம், சுக்லபட்ச, சுத்த தசமி, மதியம் 2.30 அளவில் அவர் சமாதியில் போய் அமர்ந்தார். தெலுங்கு பஞ்சாங்கம்படி அவர் சமாதி பிரவேசம் செய்த அத்தருணம் இன்று இந்த பிற்பகல் வேளையில். 'ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சிவாய பிரம்மனே நமஹ'... குருநாதர் திருவடிகளுக்குப் போற்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக